ஞாயிறு, ஆகஸ்ட் 16

தென்றலா? வாடையா?.....


வீசும் திசையைக் கொண்டு ...



தென்றலிலும் வாடையிலும்
தெம்மாங்குப் பாடித்
திகட்டியிருக்கும் வேளையிலே
தேடித் தேடித் சொல்ல வந்தேன்

உயிராய்
உலகை இயக்கும் காரணியாய்
உலவும் காற்றை
ஊதிப் பார்க்க வந்தேன்

கொடி அசைந்ததும் …………
குழப்பம் வேண்டாம்
காற்று இருப்பதால்தான்
கொடி வளர்ந்தது, அசைந்தது

வாயுக் கலவையில்
79% நைட்ரஜனும்
21% உயிர் காற்றும்
3% கரியமில காற்றும்

விகிதங்களாய் கலவைகளாய்
வளி மண்டலத்தில்
விலையேதுமில்லாது
வலம் வருகின்றன

புவிச் சுழல்வதால்
சூரிய ஆற்றலால்
பருவ மாற்றங்களால்
காற்று உருவாகிறது

நீர் இயங்க
மின் காந்த ஆற்றல்
ஹைட்ரஜன் ஆக்ஸிஜனை
பிரித்தெடுக்கிறது

வெப்பநிலை வேறுபாட்டால்………………..
வெப்பக் காற்றுக்கும்
குளிர் காற்றுக்குமான
போட்டியில் உருவாவதுக் காற்று

எடைக் குறைவான
வெப்பம் மேலெழும்ப
குளிர் துரத்தக்
காற்றுகள் உருவாகின்றன

தாவரங்களின்
ஒளிச் சேர்க்கையால்
உயிர்  காற்று
உலகில் உருவாகிறது

நிலவு நேரத்தில்
நிலத்திலிருந்து
கடல் நோக்கி வீசிவது
நிலக் காற்று

இளவெயிலில்
ஆழியிலிருந்து
நிலம் நோக்கி வீசுவது
கடற் காற்று

வடகிழக்கிலிருந்து
நிலநடுக்கோடு நோக்கி
வீசுவது
வாணிபக் காற்று

எலக்ட்ரானும்,
புரோட்டானும்
நுண்துகளாய் வெளியேற
சூரியக் காற்று

புவியின் மேற்பரப்பில்
கிடைமட்டமாய் வரும் வாயுவை
செங்குத்தாய் ஆக்குவது
காற்றோட்டம்

வடகிழக்கும்
தென்மேற்கும்
எந்த திசையெனக்
கற்றுக் கொடுப்பதும் காற்றுதான்

வளி இயங்க
வாணிப, பருவ, கடல்
நிலக் காற்றென
வலம்வரக் கண்டோம்

இயற்பியலில் மட்டும்
காற்றில்லை என்றே
கட்டுரைத்து
வெற்றிடத்தை உருவாக்கினர்

அடர் கல்லில்
அவர்களின் கலவியில்
காற்றுக்கு இடமில்லையாம்
அஃது இயற்கையின் விதியாம்

இகலோகம் எங்கெங்கும்
இயற்கையாய்
நீக்கமற நிறைந்திருப்பது
காற்றுதான்

சூரியனிடம் ஹீலியமும்
வாகனங்களால் கார்பன் டையக்ஸைடும்
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பனும்
கடைமடையில் மீத்தேனும்

ஹைட்ரோ கார்பனின் வகைகள்
மீதேன், ஈதேன் , ப்ரோபேன் , பியூட்டேன்
நீர்கரிம வாயுக்கள்” என்றே
நினைவில் கொள்ளுங்கள்.

கடற்கரையில் அலையலையாக
கயத்தாற்றில் காற்றாலையாக
காதலனுக்கு தென்றலாக
கடுங்கோபத்தில் சூறாவளியாக

இளந்தென்றல் குழந்தையாக
ஆடிக்காற்றில் இளைஞனாக
புயற்காற்றில் புரியாதவனாய்
சூறாவளியில் சூன்யமாய்

எத்தனை வடிவங் கொண்டாலும்
ஏற்றுக் கொண்ட மனிதா
இருப்பதில்தான் – புதிய
இனம் தேடுகிறாய்

அடிவளி மண்டலத்தில்
தூசியும் நீராவியும் மிதக்க
வெப்ப மாறுபாடுகளால் - 90%
காற்றின் வகைகளைக் காணலாம்

புவி ஈர்ப்பு விசையால்
பூமியை நோக்கி இழுக்கப்பட்டு
பல்வேறு அடுக்குகளாய்
பூமியின் வளி மண்டலம்

வளிமண்டலத்திலுள்ள
காற்றுகளின் அழுத்தமே
தண்ணீர் - திரவமாய்
இருக்கக் காரணம்.

புற ஊதாக் கதிர்களை
உறிஞ்சுவதன் மூலமாக - நீர்
உறையாமலும் ஆவியாகமலும்
திரவ நிலையில் கிடைக்கிறது

சல்ஃபர் டையாக்ஸைடு
நைட்ரிக் ஆக்ஸைடு
நச்சு நாற்றமாய்
நாம்தான் காரணமோ?

இயற்கைக்கு
இடர் செய்ய
இனாமாக அளிக்கிறது
புற்று நோயை

நகரமாயமாக்கலின்
வாகனப் பெருக்கத்தாலும்
தொழில் மற்றும் கழிவுகளால்
காற்றுக் கறைப் படிந்தது

குளிர்பதனக் கருவிகளின்
கார்பன் வெளியிட்டால்
ஆர்டிக், அண்டார்டிக்காவில்
ஓசோனில் ஓட்டை விழுந்தது

சூரியக் கதிர் வீச்சு
ஓட்டை வழியாய்
உலகை வெப்பமாக்குகிறதா
உன்னைதான் தாக்குகிறதா

அடைப்பதற்கு வழி
“எம் சீல்” பயன்படுத்துவாயா
ஏமாந்துப் போவாயோ
ஏதோ முடிவு செய்

எண்ணெய் நிலக்கரியை
எரித்தால் நைட்ரஜன்
வாகனம் ஓட்டிட
வருவது கார்பன் டையாக்ஸைடு

கார்பன் முழுமையாக
எரியாது போனால்
கார்பன் மோனாக்ஸைடு
காற்றில் நச்சாய் வலம்வரும்

ஆவியாகும் கரிம சேர்வையோ
ஆக்ஸிஜனமேற்றமடைந்து
குளோரைன், சல்பர்
உள்ளடக்கியதாகும்

நிலையானக் கரிம வாயுக்கள்
மண்ணைப் பாதிக்கும்
பாலிவினைல் குளோரைடு
மருந்தாகவும உயிர் காக்கும்

ஓசோன்
மூடுபனிக்குக் காரணம்
புற ஊதாக் கதிர்களை தடுக்கும்
படை மண்டலமாகும்

தென்மேற்கிலிருந்து
தேடிவரும் ஈரக் காற்று
வாரி வழங்குவது
மாரியெனும் மழையை

மண்ணைத் தூய்மையாக்கி
மறுபடியும் உருவாக்கி
உயிரை வளர்க்கும் 
உலகைக் காக்கும்

கல்லும் மண்ணும்
கரையுமோக் காற்றால்
காலத்தின் கோலத்தை
கீழடியும் உரைக்குமோ?

நான்கடுக்கு
வளி மண்டத்தில்
மேலடுக்கு குளிர்
மீதி கதகதப்பு

அய்யாயிரத்து இருநூறு 
மில்லியன் மில்லியன்
காற்றின் எடை
கற்றவன் சொன்னது

உயர்மட்டத்தில் உலவும்
மூடுபனி முகில்கள்
முன்னறிவிக்கும் வானிலை
பொய்யாகும் சிலவேளைகளில்

காற்றின் எல்லை
காத தூரமா
கணக்கிட முடியுமா?
காலத்தால் மாறுமா?

நேற்றுவரை
நூறுக் கிலோமீட்டரென
நிருபித்தவன் – இன்று
நிலவைத் தாண்டியென ஆருடம்

ஜியோகரோனாப் பகுதியென
நாசா வரையறுக்க
லைமான் ஆல்பா போட்டான்களின்
கூறுகளால் உறுதி என்கின்றனர்

மீத்தேன், அம்மோனியா
நிலக்கரியின் கலவையை கொண்ட
பூமியின் மேற்பரப்பு
மாறி நாளாகி விட்டது

நீர் நீராவி, கார்பன் கலவைகள்
ஹலோஜன் அமிலங்கள்
போரிக் அமிலங்கள்
நுழையத் தொடங்கி விட்டன

காலநிலைக்கும்
நில அமைப்பிற்கும்
வளரும் தாவரங்கள்
காற்றின் காரணங்கள்

காற்றை எங்கே தேடுவது
வெட்ட வெளியிலா
அறிவியல் கூடத்திலா – நாம்
சுவாசிக்கும் உலகில்

க்ளோரோபாம் மயக்கநிலைக்கு
சையனைடு மரண நிலைக்கு
ஹைட்ரஜன் சையனைடு
புல்பூண்டு முளைக்காதிருக்க 

காற்றின் வகைகள்
கடவுள் வகையல்ல
சிலருக்கு தீண்டாமை – ஆயினும்
சாத்தானின் வகையல்ல

சாதிய அடுக்காய்
கட்டண தரிசனங்களை
கோயில்கள் தீர்மானித்தாலும்
காற்றே உன்னிருப்பை தீர்மானிக்கும்


காற்றுக்கு வேலியிட்டு
காசுக்கு விற்பாயோ
கனவான்களுக்கு மட்டுமென
தனிச் சரக்காய் மாற்றுவாயோ

சகலரும் சுவாசிக்க
சமுகத்தை நேசிக்க
சகாயம் செய்ய வேண்டாம்
மாசுக்குச் சாமரம் வீசாதிருங்கள்

வளி இல்லையெனில்
வலிமை நிறைந்த
வாழ்வில்லை – வாழ
வளிக் காப்போம்



திங்கள், ஆகஸ்ட் 3

ஊடகம்


  

ஜனநாயகத் தூணா
பணநாயகக் கோணலா
அதிகார மோதலில்
அவர்கள் பலிகடாக்களா…….!!!!!!

அச்சு
காணொளி
சமூகம் என
வகையிருந்தாலும்

வியாபாரம் ஆகுமென்றால்
நிர்வாணக் கும்பமேளாவையும்
அத்திவரதனையும் நேரடி ஒளிபரப்பி
பக்தி வளர்த்த ஊடகம்

இலாப இலக்கு என்பதால்
இரசனை முன்னே நிற்க
இலட்சியம் பின் என்றாக
இன்றைய இழப்புகள்

ஊடகம்
ஊசலாடிக் கொண்டிருக்கிறது
இடம் வலமென்றாலும்
வளவள என்றிருக்கிறது

அச்சுறுத்தல்கள்
ஆங்காங்கே அனைத்திலும்
ஆம் – “இடம்” இல்லையென
“வலம்” வருகின்றனர்

சிந்தனைகளுக்கு
இடம் கொடுத்ததால்
தேச விரோதியென
தீர்த்துச் சொல்கிறார்கள்

சிந்திக்காதவர்களின் கவசம்
கந்தனிடம் நம்பிக்கை
பகுத்தறிவாளர்களின் கவசம்
பற்றற்றக் கேள்விகள்

அடையாளம் காட்டப்பட்ட
ஊடகவியலாளர்களின்
உளவியல்
உயிர் பயம்தான்

இஸ்லாமிய ஊடகவியலாளர்
இங்குமங்கும் அலைந்து
நான் அவனில்லை – என
நிருப்பிக்கப் பட்டபாடு

வேலையிழைப்பை
வேறு வழியில்
நிவர்த்திச் செய்யலாம்
உயிர்………………………..

களையெடுப்பென
காயடிக்கப்படுவதால்
கார்ப்பரேட் சிறைக்குள்
கருகுமோப் பகுத்தறிவுகள்

கலாநிதி
வீரபாண்டியனை
வெளியேற்றியப் போது
வாளா யிருந்து விட்டு

இந்து
ஆனந்த விகடன்
நியூஸ் 18 என
தொடர்கதையானப் போதும்

உத்திரபிரேசத்தில்
தோட்டா வெடிக்க
ஊமையிருந்தவர்கள்
தமிழகத்தில் தப்புவார்களா?

உழைத்துக் கொடுத்தவர்கள்
ஓரம் கட்டப்படுவதால்
உண்டான எழுச்சியோ - உணர்வால்
உயிர் பெற்றக் காட்சியோ?

தன்னைக் காக்க
தனித்தனியான முயற்சிகள்
நான் அவனில்லையென
அவசரச் சமர்பிப்புகள்

“பால் பாக்கெட்” சேகர்
எச்சு ராஜா
நாராயணன்களுக்கு
சிம்மசானம் கொடுத்து

வலதுக் கருத்துக்கு
வடிகட்டிய முட்டாள்களை
வரவேற்றக் காரணத்தால்
வந்த வினைகள்

நடுநிலைச் செய்திகள்
நக்கிப் பிழைப்பவர்களுக்கு
உள்ளது உள்ளவாறா
ஊமை ஊடகங்கள்

கனக வேலோ
கழக தோழர்களோ
காணாது இருந்தனர் – அவர்களின்
கவலை ஓட்டு மட்டுமே

அம்பானி அடித்தாலென்ன
அய்யர் குதித்தாலென்ன
பொய்யரை இனங்காட்டு
பொதுவாய் இனங்கூடு

அச்சத்தைத் தோற்றுவிக்க
அவனால் முடியுமென்றால்
அடிமைகள் பிரிந்திருக்கின்றன - அவை
இணையாதென அறிந்திருக்கிறான்

அணிதிரள்
மாற்றத்திற்கானச் சங்கம்
குறைகளை தீர்ப்பதற்கா
கொள்கைகளை வளர்ப்பதற்கா

வலுவற்று இருப்பதினால்
வலதுகளின் சர்வாதிகாரமா
வலுபெற வழியென்ன
வாழ்வை இழப்பதுவோ

கழக நண்பர்களோ
கட்சி தோழர்களோ
காப்பார்களோ – அங்கனமாயின்
எதுவரை?

ஓட்டு பொறுக்குவது
உனது நலனுக்கல்ல
ஆட்சி அதிகாரத்திற்கு
அதைத் தக்க வைப்பதற்கு

ஒற்றைத் தேசமாய்
உருமாற்றத் தயாரிப்புகள்
ஒத்தூதும் ஊடகங்கள்
உணர்வற்றக் கழகக் கட்சிகள்

ஹை கோர்ட்டாவது
………….. என்ற போதே
அந்த போலீசும், மன்றமும்
அவர்களுக்கானது என்றானது

சட்டம் தெரிந்தாலும்
சார்போடு இருப்பது
சனநாயகம் என்று
போலீஸ் அறியும்

இரத யாத்திரையில்
இரத்த களறியாக்கி
இராம ராஜ்ஜியத்தை அளிப்பதாய்
சம்புகனை கொல்ல வருகிறார்கள்

கொலைமிரட்டல் விடுப்பது
தரக்குறைவாய் பேசுவது
கேள்விகளுக்குப் பதிலில்லை என்றால்
கோவேறுக் கழுதையாய்க் கணைப்பது

இது வாடிக்கையானப் பொழுது
இந்துக்கள் புண்பட்டதாய்ப் புலம்ப
பார்பனத்திகளும்
பகிரங்கமாய் மிரட்ட

பக்திக்கு எதிராய்
பகுத்தறிவுக் கேள்விகள் 
பார்ப்பனன் நெளிய
பாமரன் குழம்ப

ஓட்டு வேட்டைக்கு
உலை வைக்கும்
உதவாத ஊடவியலாளர்களை
டி ஆர் பி க்காக பாதுகாக்கவா முடியும்

நட்டத்தை
நாட்டாமை சரி செய்வார்
நாவண்மைக் கேள்விகளால்
நாடாளும் வாய்ப்பல்லவா போகும்

கைத்தட்டி விளக்கேற்றி
மலர்தூவிப் பாடைக்கு அனுப்பும்
கொரோனாக் காலமிது
கொள்கைக்கு அல்ல

கறுப்பர் கூட்டம்
களப் பலியானது
காவிகள்
கறுப்பாய்தான் இருந்தனர்

புதிய இந்துக்கள்
இறை மறுப்பாளனை
எதிர்ப்பு தெரிவி என
அழுத்தம் கொடுக்கிறார்கள்

கூடுதல் விலைகொடுத்து
ரபேல் விமானம் வாங்குவதும்
கஷ்மீரை முடக்கி வீரமென்பதும்
தேசபக்தி நாடகக் காட்சிகள்

சுற்றுச்சுழியல் கருத்துருக்கு
மாற்றுக் கருத்துரைத்த
பத்மபிரியாவையும்
பதர வைத்தனர்

கருத்துக் கேட்பு
கண்துடைப்புதான்
காவுக் கேட்போமென
காவிகள் எச்சரிக்கின்றனர்

பெரியாரின் மண்ணென்று
பேசாதிருந்தால்
காவி மாலைகள் காத்திருக்கும்
சிலைகளும் சேதப்படும்

பெண்ணைக் கொச்சையாய்
முகநூலில் எழுதியவனை
பிணையில் விடுவித்து
விசுவாசத்தைக் காட்டுது போலீஸ்

செருப்பு மாலை அணிவித்தவனை
ஓராண்டு சிறைக்கு அனுப்புது
பார்பனனுக்கும், சூத்திரனுக்கும்
பேணப்படும் மனுநீதி ஆட்சியல்லவோ

ஆதாரமோ
அவமானமோ
கிஷோர் கே சாமிக்கும்
மாரிதாசுக்கும் இருக்கிறதா என்ன?

சமூக ஊடகம்
வெற்று ஆரவாரமும்
பொய்களை தாங்கும்
சனநாயக தூணாக விளங்க

நகர்புற நக்சல்கள்
நாட்டின் எதிரிகள் என
மண்ணை மக்களை
நேசிப்பவர்களுக்கு பட்டம்

போக்கிரிகள்
பொய்யான பெயரில்
பொய் பரப்பும் – நவீன 
செப்பேட்டு ஆவணங்கள்

வரலாறு அவர்களை
வகை பிரிக்கும்
அதுவரை
அமைதிக் காக்காது

சகலரும் சமமென்ற
சங்கை ஊதுங்கள்
சாமான்யனும்
சரியென்றே பின் வருவான்

மேல்பாதி திரௌபதி

ஆறுகால ஆராதனையின்றி அம்மன் அவதியுறுவதாய் ஆங்கொரு புலம்பல் அரவமில்லாது ஆலயத்தை திறந்து ஆராதனை முடிந்தவுடன் மூடிடவும் பக்த கோடிகள் பக்கம் வந்த...