ஞாயிறு, ஆகஸ்ட் 28

சுதந்திரம் 75 ஆம் ஆண்டில்

 





முதன் முறையாக
உத்திரபிரதேசத்தின் ஒரு கிராமம்
மின்னொளியை கண்டது


முதன் முறையாக
தமிழக கிராமம் ஒன்றில்
பேரூந்து வசதி கிடைத்தது

முதன் முறையாக
ஊராட்சியில் தலித் ஒருவர்
தேசியக் கொடியேற்றுகிறார்

முஸ்லிம் பிரதிநிதி
ஒன்றிய அமைச்சராய்
அங்கம் வகிக்காத திருநாளாயிற்று

சுயச்சார்பு என்பது
இந்தியத் தேசியக் கொடியை
சீனாவிடம் வாங்குவதாய் ஆனது

சுதந்திரந்தின் போது ரூ. 3.31 இருந்த
ஒரு டாலரின் மதிப்பு
வளர்ச்சியடைந்து ரூ.79.87 ஆனது

75 ஆண்டுகளில் உருவான
தேசத்தின் கட்டுமானங்கள்
நட்டக் கணக்கில் விற்பனை

ஈஸ்ட் இன்டியா கம்பெனி
அம்பானி அதானி கம்பெனியாக
பெயர் மாற்றமடைந்திருக்கிறது

அக்மார்க் தேசபத்திக்கு
கொடியேற்றுங்கள் வீடுதோறும்
முடிவற்ற விலையேற்றத்தை மறந்திருங்கள்

நளினம்

  கற்றைக் கூந்தலில் பூச்சூடி கட்டுடலில் ஆடைச் சூடி சிற்றிடை தன்னில் சிறையிட்டு சிந்தனையைச் செயலிழக்கச் செய்தே பற்றற்று வாழ்ந்த பாமரனை பரி...