வியாழன், செப்டம்பர் 25

அறிவேணி ஆசிரியர்

















அறிவேணி ஆசிரியர்
அகரத்தில் ஆரம்பித்து
அறிவியல் ஆயிரம்
அதனுடன் அறநெறி
சிறியோர் நெஞ்சில்
சிறப்புடன் பதித்திட
செறிவுற்ற மாணவனாய்
செயலாற்ற மகிழ்வாரே

கற்போர் யாவரிடமும்
கனவுகளை விதைத்து
பிற்போக்கு எண்ணங்களை
பிழையெனச் சுட்டி
நிற்காதப் பயணத்தில்
நின்நிலை யுணர்த்தி
உற்சாக மளித்திடும்
உறவுதானே ஆசிரியர்

தக்கதொருக் கல்வியை
தாராது தடுத்தே
திக்கற்ற சமுகமா
திருமாலும் வைத்திருக்க
ஏக்கமுற்ற ஏழை
எளியோரின் கல்வியை
சக்தியால் சாதித்தது
சாவித்திரிபாய் பூலேவே

. வேல்முருகன்


கருத்துகள் இல்லை:

பாரத் மாதா கீ ஜெய்

    சிக்கந்தர் தர்கா தூணில் சிவனின் மகனுக்குத் தீபம் சி.ஐ.எஸ்.எப் சகிதம் சீக்கரம் கிளம்புங்கள் சுவாமி உளரல்கள் சட்டமாக ஊர் வேடிக்கை பார...