ஞாயிறு, மே 19
வல்லினக் காதல்
கன்னியின் வேண்டுதல்
காளையால் கைகூடுமோ
கசந்த காதல்
காக்க வழிகாட்டுமோ
கண்டவுடன் அழைத்து
காதலி கைப்பற்றுமோ
கலந்த மனங்கள்
களிப்புற்று வாழ்ந்திடவே
கட்டுப்பட்ட காளையாய்
காதலன் வருவானா
காதல்பற்ற மெல்லினத்தை
கலப்பானோ வல்லினமாய்
சனி, மே 18
கண்மூடும் வேளையிலே
கண்மூடும் வேளையிலே
கனவில் வந்தவளே
பண்பாடி அலைந்தோம்
பசுமைச் சூழ்வெளியில்
தண்நிலவு நீண்டிருக்க
தந்தநின் முத்தங்கள்
மண்ணுலகில் உன்னிடமே
மறுபடியும் வேண்டுகிறேன்
தண்டையிடும் சத்தம்
தளிர்நடை என்றானதே
சண்டையிடும் மனதும்
சங்கமத்தை வேண்டுதே
தொண்டுச் செய்ய
தோழமையை விரும்பும்
வண்டு பூவிடம்
வனைந்த பாவிது
கண்விழிக்க கலைந்தன
கண்மணி யாரென
அண்டை அயலகத்தில்
ஆர்வமாய் தேடிட
எண்ணிய வண்ணம்
எவரும் இல்லை
கண்ணூறுப் பட்டிருக்கும்
காத்திரு காதலிக்க
செவ்வாய், மே 14
ஜெய்ஸ்ரீராம் - நல்லகாலம் பொறக்குது
ஹிஜாப் – மதஉரிமை
திருநீறு – இந்துத்துவம்
வெறுப்பை விதைக்கும்
வேத விற்பன்னர்களோ
வேண்டாத மதவாதிகளோ
மேற்கூறியவை
நாலு வரியில்
நால் வர்ணத்தையல்ல
நாட்டை பிளவுபடுத்த
முகநூலில் வெளியிட்டவை
பொய்யும் புனைச்சுருட்டும்
பிழைப்பாய் கொண்டவர்கள்
வாழ்வை அழிக்க
வதந்தியை பரப்பினாலும்
ஆய்ந்தறியும் திறன்
அறிவுடைத் தமிழனுக்கு
ஆதியிலிருந்து உண்டென்பதால்
அடியிற் காணும் விளக்கங்கள்
மடிசார், பஞ்சகச்சம்
கொடியிடை மறைக்க
குற்றமேதுமில்லை
கலாச்சாரத்தின் அடையாளமாய்
காணும் ஆடைகளை
கலவரமாய் மாற்றுவதேன்
ஜப்பான், பூட்டான் ஆடைகளை
சீர் செய்ய கிளம்பாமல்
ஹிஜாப் –ல் நுழைவதேன்
பிடி சாம்பலாய்
பிணமான பின் மாறும் உடலில்
தரிக்கும் திருநீறு
சைவத்தின் அடையளாமாம்
இந்துத்துவம் – இங்கே
வந்துதிப்பது எதற்காக
திருமண், சந்தனம்
குங்குமம் குறியீடுகளாய் இருக்கலாம்
குழப்பம் விளைவிக்கவல்ல
புர்கா – மதஉரிமை
காவித்துண்டு – மதவாதம்
பூணூல், உச்சிக்குடுமி
சர்வாதிகார சாதியாய் இருக்கட்டும்
சமுகத்தை பிரிக்காத வரை
மங்களூர் கலவரம்
மானுடத்தின் நிலவரமா
மதவாதத்தின் எதிர்வினையா?
கருப்பு திரவிடமாய்
சிகப்பு கம்யூனிசமாய்
பச்சை விவசாயமாய்
மஞ்சள் மங்களமாய்
மாநிலத்தில் இருக்கையில்
காவி கலவரமாவதேன்?
ஹலால் உணவு - மதஉரிமை
வெஜிட்டேரியன் உணவு – பார்பனியம்
கிடைத்ததை உண்டு
காலத்தை வென்றவன்
ஹலால் அசைவமென்கிறான்
கனியோ காய்கறிகளோ
மனிதன் உண்ண
மண்ணில் விளைந்தவை
குதிரைகளை கொன்று
அசுவமேத யாகம் வளர்த்தவர்கள்
அக்லக்கை கொன்று – தாங்கள்
அசைவமல்ல என்கிறார்கள்
ஆடு, மாடு, கோழிகள்
அறுத்து ஏற்றுமதி செய்பவர்கள்
அவாள்களாக இருக்க
அடுத்தவன் உண்பதை
அவமானமாக சொல்பவனின்
அழுக்கை யார் சொல்வது
மச்ச, கூர்ம, வராகம்
அவதாரங்களா….. மாமிசமா ......
கொல்கத்தா பிராமணனுக்கும்
ஆமைக்கறி சீமானுக்கும் தெரியாதா
அல்லாஹூ அக்பர் – மதஉரிமை
ஜெய்ஸ்ரீராம் – தீவிரவாதம்
இறைவனே மிகப் பெரியவன் எனும்
இஸ்லாத்தின் அல்லாஹூ அக்பரை
இவர்கள் ஏன் சீண்டுகிறார்கள்
ஓம்….
ஓங்காரமாய், பிரணவமாய்
ஒலிக்க ஒரு உபவத்திரமில்லை
ஹரஹர மகாதேவ
அரோகரா, கோவிந்தா ஒலிகளில்
பக்தியே தவழ்ந்தது
புத்தம், சரணம், கச்சாமி
பரலோகத்திலுள்ள பிதாவே
அல்லாஹூ அக்பர்
ஒன்றிணைந்தே இருந்தோம்
மகமாயி, மாரியாத்தா
முருகன், சிவனை
முடக்கவா ஜெய்ஸ்ரீராம்
ஜெய்ஸ்ரீராம் ஒலித்தவுடன்
ஜெக்கம்மா
கெட்டகாலம் பொறக்குது என்றாளே?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
மும்மொழிக் கல்வி
மும்மொழிக் கல்வி மூத்தக்குடி தமிழனுக்காம் முட்டாள்கள் முகாரி பாடுகிறார்கள் ஏட்டுக் கல்வி இந்தி பேசுபவர்களுக்கு இரண்டா? ஒன்றா? கேட்பது யார்? ...
-
மும்மொழிக் கல்வி மூத்தக்குடி தமிழனுக்காம் முட்டாள்கள் முகாரி பாடுகிறார்கள் ஏட்டுக் கல்வி இந்தி பேசுபவர்களுக்கு இரண்டா? ஒன்றா? கேட்பது யார்? ...
-
தனித்தீவா நானிருந்தேன் தடுத்தாட் கொள்ளவந்தாய் இனியென்ன என்றபோது இதயமதை தந்தாய் பனிபடர்ந்த பொழுதிலும் பாற்கடல் அமுதளித்தாய் எனினும் ஏனின்று...
-
அழிவற்ற ஆன்மா அகிலத்தில் உண்டோ எழில்மிக்க மானுடத்தில் எதுவென்று உரைப்பீரோ மொழியற்று இருக்குமோ மெய்யற்று வேறாகுமோ வழிவழியாய் ஆன்மா வந்ததை ய...
-
செயற்கை நுண்ணறிவு செல்லாக் காசாக்கியது செருக்குடனிருந்த அமெரிக்காவை 51 இலட்சம் கோடி அங்கு காணாமல் போனது ஆரெடுத்தனர் அத்தனை கோடிகளை கொள்ளை ந...
-
காதல் வேண்டி கட்டியவளிடம் கோரிக்கை காதில் வாங்கவில்லை ஆண்டு முழுதும் ஆண்டனுபவிக்க அருள் கேட்க பட்டத்தரசி பட்டியலிட்ட காரணங்கள் பட்டினிக்கே ...