ஏற்றத் தாழ்வில்லா
ஏட்டுக் கல்வி
எண்பதாண்டு கடந்தாலும்
எட்டாக் கனியா
கற்றலின் கடவுளும்
நீட்டைத் தடுக்காதோ
ஐஐஎம், ஐஐடி
அயலாகி வாராதோ
விருப்பமுள்ளக் கல்வியில்
விண்ணைத் தொடலாம்
ஒருங்கிணைந்தக் கல்வியில்
உலகை அறியலாம்
பருந்தாப் பறக்கையில்
பலதும் காணலாம்
பொருந்தாக் கல்வியில்
புலராது மானுடமே
ஆரியமோ திராவிடமோ
அடிப்படைக் கல்விக்கு
போரிட்டு போனவுயிர்
போகட்டும் என்பீரோ
கோரிக்கை வைப்பதா
குடிகளின் உரிமை
பேரிகையை முழக்கு
பேதமற்ற கல்விக்கு
செவ்வாய், நவம்பர் 12
ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி
சனி, நவம்பர் 9
அத்தானின் ஆசை
அடியே உனைபார்க்க
ஆரத் தழுவது மனது
வடிவ ழகுதானே
வச்ச கண்மூட மறக்குது
துடிக்கும் நெஞ்சமது
தூதுச் சொல்லி வைக்குது
முடியுமா முத்த மொன்று
மூச்சு முட்டிப்போகுது
அத்தானின் ஆசைக்கென்ன
அளவில்லா வெள்ளம் போல
முத்தத்தின் தேவையென்ன
முக்கனிச் சுவையைத் தேடவா
மொத்தத்தில் வித்தைகள்
மோன நிலையில் அறியவா
நித்தமும் நீயெனை
நீங்காது காப்பாயா வேலவா
கற்ற லென்பது அனுவபம்
கண்மணி ஒத்துழைக்க குதுகலம்
பற்றிப் படரட்டு மின்பம்
பயிற்சிகள் பெற்றிடும் காலம்
அற்றைத் தினத்தின் அழகை
அன்றே ரசித்து மகிழ்வோம்
அற்புதம் இதுவென அன்பே
ஆயுள் முழுக்க வாழ்வோம்
ஆரத் தழுவது மனது
வடிவ ழகுதானே
வச்ச கண்மூட மறக்குது
துடிக்கும் நெஞ்சமது
தூதுச் சொல்லி வைக்குது
முடியுமா முத்த மொன்று
மூச்சு முட்டிப்போகுது
அத்தானின் ஆசைக்கென்ன
அளவில்லா வெள்ளம் போல
முத்தத்தின் தேவையென்ன
முக்கனிச் சுவையைத் தேடவா
மொத்தத்தில் வித்தைகள்
மோன நிலையில் அறியவா
நித்தமும் நீயெனை
நீங்காது காப்பாயா வேலவா
கற்ற லென்பது அனுவபம்
கண்மணி ஒத்துழைக்க குதுகலம்
பற்றிப் படரட்டு மின்பம்
பயிற்சிகள் பெற்றிடும் காலம்
அற்றைத் தினத்தின் அழகை
அன்றே ரசித்து மகிழ்வோம்
அற்புதம் இதுவென அன்பே
ஆயுள் முழுக்க வாழ்வோம்
செவ்வாய், நவம்பர் 5
தெவிட்டாத இன்பம்
குறள் 1328:
ஊடிப்
பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.
ஊடிய பிறகு
கூடியதால்நாடி நரம்பெல்லாம்
ஆடி அதிர
வடிந்த நெற்றி வேர்வையில்
தேடினாலும் கிடைக்காத
தெவிட்டாத இன்பம்
மீண்டும்
ஊடிக் கொள்ள
விளைந்திடுமோ?!!
சனி, நவம்பர் 2
நிலையானது?!!!
பணம் புகழுக்கு
பகீரத பிரயத்தனம்
பலகாலம் நிலைத்திருக்குமோ?
ஆண்டாண்டு கால
அதிகாரம் அப்படியே
அடுத்த தலைமுறை தொடரவா?
இழப்பதற்கு துணிவில்லை
இறப்பதற்கு எண்ணமில்லை
எனினும் நடப்பதென்னவோ
ஆர்டிக் உருகுது
ஆங்கொரு புல்லினம் மடியுது
ஆலமரமும் அடியோடு சாயுது
நிரந்தரத்தைத் தேடுவதும்
நினைத்ததை தக்க வைப்பதும்
தேக்கமடைய வைக்கிறது….
வாழ்க்கை
வற்றாத நதி போல
வழிகளை உருவாக்கி ஓடட்டும்
மேடு பள்ளங்கள்
காடுகள் மலைகள்
கலங்கி நிற்பதில்லை
வாழ்வும் அப்படிதான்
சாசுவதத்தை தேடாது
சஞ்சரிக்க பழகுங்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
மும்மொழிக் கல்வி
மும்மொழிக் கல்வி மூத்தக்குடி தமிழனுக்காம் முட்டாள்கள் முகாரி பாடுகிறார்கள் ஏட்டுக் கல்வி இந்தி பேசுபவர்களுக்கு இரண்டா? ஒன்றா? கேட்பது யார்? ...
-
மும்மொழிக் கல்வி மூத்தக்குடி தமிழனுக்காம் முட்டாள்கள் முகாரி பாடுகிறார்கள் ஏட்டுக் கல்வி இந்தி பேசுபவர்களுக்கு இரண்டா? ஒன்றா? கேட்பது யார்? ...
-
தனித்தீவா நானிருந்தேன் தடுத்தாட் கொள்ளவந்தாய் இனியென்ன என்றபோது இதயமதை தந்தாய் பனிபடர்ந்த பொழுதிலும் பாற்கடல் அமுதளித்தாய் எனினும் ஏனின்று...
-
அழிவற்ற ஆன்மா அகிலத்தில் உண்டோ எழில்மிக்க மானுடத்தில் எதுவென்று உரைப்பீரோ மொழியற்று இருக்குமோ மெய்யற்று வேறாகுமோ வழிவழியாய் ஆன்மா வந்ததை ய...
-
செயற்கை நுண்ணறிவு செல்லாக் காசாக்கியது செருக்குடனிருந்த அமெரிக்காவை 51 இலட்சம் கோடி அங்கு காணாமல் போனது ஆரெடுத்தனர் அத்தனை கோடிகளை கொள்ளை ந...
-
காதல் வேண்டி கட்டியவளிடம் கோரிக்கை காதில் வாங்கவில்லை ஆண்டு முழுதும் ஆண்டனுபவிக்க அருள் கேட்க பட்டத்தரசி பட்டியலிட்ட காரணங்கள் பட்டினிக்கே ...