புதன், ஆகஸ்ட் 22

கணக்கு

வணிக நிறுவனங்கள் ஆண்டு அறிக்கை சமர்ப்பிக்கும் போது ஒரு பக்கம்  நன்மதிப்பு (Goodwill) என்று காண்பிப்பார்கள்.  இத்தனை ஆண்டு அவர்கள் நடத்திய தொடர் வணிகத்தால் ஏற்பட்ட நன்மதிப்பு என்பது கணக்கு.

அதற்கு என்ன?

தற்போது தங்களின் குடும்ப பெயர் பயன்படுத்துவதால் ஏற்பட்ட நன்மதிப்பிற்கு இலாபத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை அதாவது சதவிகிதத்தில் 0.5%   அல்லது அதற்கு குறைவாக எடுத்துக் கொள்கிறார்கள்.

இந்த பழக்கம் 90 களின் ஆரம்பத்தில் டாடா/கோத்ரேஜ் நிறுவனங்கள் ஆரம்பித்து வைத்ததாம் இந்திய பெருமுதலாளிகளின் சார்பாக

ஏன்?

மிகப்பெரிய குழுமம் ஒரு துணை நிறுவனம் ஆரம்பிக்கும் போது குழுமத்தின் பிரதான பெயரை இணைத்தோ அல்லது அக்குழுமத்தின் துணை நிறுவனம் என்றோ ஆரம்பிப்பதால் ஏற்படும் நன்மதிபிற்கு
புதிய நிறுவனம் இத்தொகையை பிரதான முதலீட்டாருக்கு கொடுக்க வேண்டும்.

நிறுவன விதிகள் என்ன சொல்கிறது?

ஒரு அசாதாரண பொதுக் கூட்டம் நடத்தி அதில் 75%  வாக்குகள் பெற்றால் இது சாத்தியமாகும்.  ஆனால் இது போன்ற நிறுவனங்கள் 75% பங்குகளை தாங்களும் தாங்கள் சார்ந்த நிறுவனங்களும் வைத்திருப்பதால் இது ஒன்றும் பெரிய வேலையில்லை.  

எதற்கு இந்த கதை

சமீபத்தில் பிரிட்டானிய பிஸ்கட் நிறுவனம் நடத்தி வரும் நுஸ்லி வாடியா தனக்கும் தன் குடும்பத்திற்கும் இதுபோன்று ஒரு லாபம் வேண்டும் என கூறுகிறார்

யார் இந்த நுஸ்லி வாடியா

பாம்பே டையிங், கோ ஏர் போன்ற நிறுவனங்களின் முதலாளி, இந்திரா காந்தியிடம் ஏற்பட்ட சிறு பிரச்சனையால் ரிலையன்ஸ் என்னும் மிகப் பெரிய சாம்ராஜ்யம் உருவாக காரணமாக இருந்தவர்.

இந்த ஆண்டு இலாபம்

The key listed firms of the group are biscuit maker Britannia Industries Ltd, plantations company Bombay Burmah Trading Corp. Ltd, textile manufacturer Bombay Dyeing and Manufacturing Co. and chemical producer National Peroxide Ltd, which together earned Rs. 13,772 crore in revenue in fiscal 2012.

இந்த வருமானத்தில் 0.25%  வேண்டுமென்பது தீர்மானம்

இவர்கள் மட்டும்தானா இந்த ஓட்டத்தில்

அட நம்ம ஊர் ஸ்ரீராம் குழுமத்தின் தியாகராஜன் இதேபோல் வேண்டுகிறார்.  முத்தூட் நிறுவனத்தின் முதலாளி தான் 50% மேற்பட்ட பங்குகளை வைத்திருக்கும் வரை நன்மதிப்பாய் ஒரு வருவாய் வேண்டுமென்கிறார்.

ஏன் கூடாதா

அவர்கள் நிறுவனம், அவர்கள் இலாபம் ஏன் கூடாதா என்கிறீர்களா.  ஆம் கூடாது.  நட்சத்திர பங்குகள் என்று சிறு முதலீட்டாளர்கள் இதில்தான் முதலீடு செய்துள்ளனர்.   அவர்களுக்கு கிடைக்கும் வருவாயில் இந்த பெருமுதலாளிகள் கை வைக்கின்றனர்

எனவே கூடாது என்பது என் வாதம்

நீங்கள் சொல்லுங்கள் மக்களே
----------------------------------------------------------------------------------------------------------------------------------

சகபதிவர் ஒருவர் எனக்கு பட்டம் வழங்கியுள்ளர்.  என்ன பட்டம்   http://thmalathi.blogspot.in/2012/08/blog-post_19.html என்பதை இங்கு சென்று காணுங்கள்.  பட்டத்திற்கு வாழ்த்துக்களும் குவிந்திருக்கின்றன.  காரணத்தை அடுத்த பதிவில் தெரிவிக்கிறேன்.


1 கருத்து:

Rasan சொன்னது…

அருமையான பதிவு.
கருத்துக்கள் அருமை. அறிந்து கொண்டேன். தொடருங்கள்.
இது என்னுடைய முதல் வருகை.

என்னுடைய தளத்தில் ஏணிப்படி

தேர்தல் 2024

நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...