செவ்வாய், ஜூன் 28

நண்பர்களின் படைப்புகள்

நண்பரொருவர் தான் எழுதியதை என் தளத்தில் பதியுமாறு வேண்டினார் அவரின் அவா இதோ........

படைத்தவனையே சாதியால் பிரித்து வைத்தார்
ஆன்மீக அறிவின்றி மோட்சம் தேடுகின்றார்
மனித இனம் கொன்று மதம் வளர்க்க பார்க்கிறார்
மனிதன் இல்லாமல் மதமா? சிந்திக்க மறுக்கின்றார்
புலப்படாத பொருளுக்கு இருக்கின்ற உயிர் விலையாய்
கொடுப்பது என மதம் வகுத்த முறையா
மனிதம் கொன்று மதம் வளர்க்க சொல்வது புனித நூலின் உரையா
தாய் தந்தையே நம் காணும் சிவசக்தி
இதையன்றி வேண்டுமோ உனக்கு தெய்வ பக்தி
சிந்தையில் சிறிதெனும் இதை நீ நிறுத்தி
வைப்பாய் எதிலும் பெற்றோரை உயர்த்தி

கருத்துகள் இல்லை:

திரளழகு

திரளழகை தீபவொளி திருத்தி எழுதிட முரணேது முந்தானை முகமன் கூறிட மரகதவுடல் மச்சானை மகிழ்ச்சியில் ஆழ்திட சரசங்கள் பயின்றிட சரணடை பேரழகே நின்னசைவ...