புதன், அக்டோபர் 3

காதல் வளர்ந்த கதை


கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து
குறள் 1144  


அவளோடு பேசுவதாக
அவரவர் பேசினர்
அதுவே எங்கள்
அன்பை வளர்த்தது

ஊர்பேச்சே
ஊக்கமானது
உள்ளம் சேர
உபகாரமானது

அஃதில்லையேல்
அவள் அன்பு
அற்று போயிருக்கும் நானும்
இற்று போயிருப்பேன்

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

குறளுக்கேற்ற வரிகள்... அருமை...

வாழ்த்துக்கள்...

பெயரில்லா சொன்னது…

''..அஃதில்லையேல்
அவள் அன்பு
அற்று போயிருக்கும் – நானும்
இற்று போயிருப்பேன்...'


சிறப்பு வரிகள்.
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

தருமி சொன்னது…

நல்ல வேளை ...!

இந்த word verification தேவையா? கொல்லுது!!!

மேல்பாதி திரௌபதி

ஆறுகால ஆராதனையின்றி அம்மன் அவதியுறுவதாய் ஆங்கொரு புலம்பல் அரவமில்லாது ஆலயத்தை திறந்து ஆராதனை முடிந்தவுடன் மூடிடவும் பக்த கோடிகள் பக்கம் வந்த...