செவ்வாய், மே 1

துடைப்பக் கட்டைகள்


வாரான் வாரான் பூச்சாண்டி
  வாரணாசி கோட்டை தாண்டி
தெருவ கூட்டிக் காட்டுறான்டி 
  திமிருதானே தினமும் செய்வானா 
எருமை சாணம் பொறுக்குவானா 
  எங்கள் சேரிக்கும் வருவானா 
உரிமை ஓட்டை போட்டதால 
  ஒருநாள் கூத்தை காட்டுறானா

எட்டுத் தெருவை பெருக்கும்
  எங்க குருவம்மா கொண்டையா
விட்டு விட்டு போனால்
   வீசும் வாசனை என்னய்யா
துட்டு வேணுமா தாறேன்
   துடைப்பம் பிடிச்சு பாரேன்
முட்டுச் சந்து தெருவில்
   மூச்சடக்கி வாழ்வோம் வாயேன்

கருத்துகள் இல்லை:

நளினம்

  கற்றைக் கூந்தலில் பூச்சூடி கட்டுடலில் ஆடைச் சூடி சிற்றிடை தன்னில் சிறையிட்டு சிந்தனையைச் செயலிழக்கச் செய்தே பற்றற்று வாழ்ந்த பாமரனை பரி...