ஞாயிறு, ஆகஸ்ட் 16

தென்றலா? வாடையா?.....


வீசும் திசையைக் கொண்டு ...



தென்றலிலும் வாடையிலும்
தெம்மாங்குப் பாடித்
திகட்டியிருக்கும் வேளையிலே
தேடித் தேடித் சொல்ல வந்தேன்

உயிராய்
உலகை இயக்கும் காரணியாய்
உலவும் காற்றை
ஊதிப் பார்க்க வந்தேன்

கொடி அசைந்ததும் …………
குழப்பம் வேண்டாம்
காற்று இருப்பதால்தான்
கொடி வளர்ந்தது, அசைந்தது

வாயுக் கலவையில்
79% நைட்ரஜனும்
21% உயிர் காற்றும்
3% கரியமில காற்றும்

விகிதங்களாய் கலவைகளாய்
வளி மண்டலத்தில்
விலையேதுமில்லாது
வலம் வருகின்றன

புவிச் சுழல்வதால்
சூரிய ஆற்றலால்
பருவ மாற்றங்களால்
காற்று உருவாகிறது

நீர் இயங்க
மின் காந்த ஆற்றல்
ஹைட்ரஜன் ஆக்ஸிஜனை
பிரித்தெடுக்கிறது

வெப்பநிலை வேறுபாட்டால்………………..
வெப்பக் காற்றுக்கும்
குளிர் காற்றுக்குமான
போட்டியில் உருவாவதுக் காற்று

எடைக் குறைவான
வெப்பம் மேலெழும்ப
குளிர் துரத்தக்
காற்றுகள் உருவாகின்றன

தாவரங்களின்
ஒளிச் சேர்க்கையால்
உயிர்  காற்று
உலகில் உருவாகிறது

நிலவு நேரத்தில்
நிலத்திலிருந்து
கடல் நோக்கி வீசிவது
நிலக் காற்று

இளவெயிலில்
ஆழியிலிருந்து
நிலம் நோக்கி வீசுவது
கடற் காற்று

வடகிழக்கிலிருந்து
நிலநடுக்கோடு நோக்கி
வீசுவது
வாணிபக் காற்று

எலக்ட்ரானும்,
புரோட்டானும்
நுண்துகளாய் வெளியேற
சூரியக் காற்று

புவியின் மேற்பரப்பில்
கிடைமட்டமாய் வரும் வாயுவை
செங்குத்தாய் ஆக்குவது
காற்றோட்டம்

வடகிழக்கும்
தென்மேற்கும்
எந்த திசையெனக்
கற்றுக் கொடுப்பதும் காற்றுதான்

வளி இயங்க
வாணிப, பருவ, கடல்
நிலக் காற்றென
வலம்வரக் கண்டோம்

இயற்பியலில் மட்டும்
காற்றில்லை என்றே
கட்டுரைத்து
வெற்றிடத்தை உருவாக்கினர்

அடர் கல்லில்
அவர்களின் கலவியில்
காற்றுக்கு இடமில்லையாம்
அஃது இயற்கையின் விதியாம்

இகலோகம் எங்கெங்கும்
இயற்கையாய்
நீக்கமற நிறைந்திருப்பது
காற்றுதான்

சூரியனிடம் ஹீலியமும்
வாகனங்களால் கார்பன் டையக்ஸைடும்
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பனும்
கடைமடையில் மீத்தேனும்

ஹைட்ரோ கார்பனின் வகைகள்
மீதேன், ஈதேன் , ப்ரோபேன் , பியூட்டேன்
நீர்கரிம வாயுக்கள்” என்றே
நினைவில் கொள்ளுங்கள்.

கடற்கரையில் அலையலையாக
கயத்தாற்றில் காற்றாலையாக
காதலனுக்கு தென்றலாக
கடுங்கோபத்தில் சூறாவளியாக

இளந்தென்றல் குழந்தையாக
ஆடிக்காற்றில் இளைஞனாக
புயற்காற்றில் புரியாதவனாய்
சூறாவளியில் சூன்யமாய்

எத்தனை வடிவங் கொண்டாலும்
ஏற்றுக் கொண்ட மனிதா
இருப்பதில்தான் – புதிய
இனம் தேடுகிறாய்

அடிவளி மண்டலத்தில்
தூசியும் நீராவியும் மிதக்க
வெப்ப மாறுபாடுகளால் - 90%
காற்றின் வகைகளைக் காணலாம்

புவி ஈர்ப்பு விசையால்
பூமியை நோக்கி இழுக்கப்பட்டு
பல்வேறு அடுக்குகளாய்
பூமியின் வளி மண்டலம்

வளிமண்டலத்திலுள்ள
காற்றுகளின் அழுத்தமே
தண்ணீர் - திரவமாய்
இருக்கக் காரணம்.

புற ஊதாக் கதிர்களை
உறிஞ்சுவதன் மூலமாக - நீர்
உறையாமலும் ஆவியாகமலும்
திரவ நிலையில் கிடைக்கிறது

சல்ஃபர் டையாக்ஸைடு
நைட்ரிக் ஆக்ஸைடு
நச்சு நாற்றமாய்
நாம்தான் காரணமோ?

இயற்கைக்கு
இடர் செய்ய
இனாமாக அளிக்கிறது
புற்று நோயை

நகரமாயமாக்கலின்
வாகனப் பெருக்கத்தாலும்
தொழில் மற்றும் கழிவுகளால்
காற்றுக் கறைப் படிந்தது

குளிர்பதனக் கருவிகளின்
கார்பன் வெளியிட்டால்
ஆர்டிக், அண்டார்டிக்காவில்
ஓசோனில் ஓட்டை விழுந்தது

சூரியக் கதிர் வீச்சு
ஓட்டை வழியாய்
உலகை வெப்பமாக்குகிறதா
உன்னைதான் தாக்குகிறதா

அடைப்பதற்கு வழி
“எம் சீல்” பயன்படுத்துவாயா
ஏமாந்துப் போவாயோ
ஏதோ முடிவு செய்

எண்ணெய் நிலக்கரியை
எரித்தால் நைட்ரஜன்
வாகனம் ஓட்டிட
வருவது கார்பன் டையாக்ஸைடு

கார்பன் முழுமையாக
எரியாது போனால்
கார்பன் மோனாக்ஸைடு
காற்றில் நச்சாய் வலம்வரும்

ஆவியாகும் கரிம சேர்வையோ
ஆக்ஸிஜனமேற்றமடைந்து
குளோரைன், சல்பர்
உள்ளடக்கியதாகும்

நிலையானக் கரிம வாயுக்கள்
மண்ணைப் பாதிக்கும்
பாலிவினைல் குளோரைடு
மருந்தாகவும உயிர் காக்கும்

ஓசோன்
மூடுபனிக்குக் காரணம்
புற ஊதாக் கதிர்களை தடுக்கும்
படை மண்டலமாகும்

தென்மேற்கிலிருந்து
தேடிவரும் ஈரக் காற்று
வாரி வழங்குவது
மாரியெனும் மழையை

மண்ணைத் தூய்மையாக்கி
மறுபடியும் உருவாக்கி
உயிரை வளர்க்கும் 
உலகைக் காக்கும்

கல்லும் மண்ணும்
கரையுமோக் காற்றால்
காலத்தின் கோலத்தை
கீழடியும் உரைக்குமோ?

நான்கடுக்கு
வளி மண்டத்தில்
மேலடுக்கு குளிர்
மீதி கதகதப்பு

அய்யாயிரத்து இருநூறு 
மில்லியன் மில்லியன்
காற்றின் எடை
கற்றவன் சொன்னது

உயர்மட்டத்தில் உலவும்
மூடுபனி முகில்கள்
முன்னறிவிக்கும் வானிலை
பொய்யாகும் சிலவேளைகளில்

காற்றின் எல்லை
காத தூரமா
கணக்கிட முடியுமா?
காலத்தால் மாறுமா?

நேற்றுவரை
நூறுக் கிலோமீட்டரென
நிருபித்தவன் – இன்று
நிலவைத் தாண்டியென ஆருடம்

ஜியோகரோனாப் பகுதியென
நாசா வரையறுக்க
லைமான் ஆல்பா போட்டான்களின்
கூறுகளால் உறுதி என்கின்றனர்

மீத்தேன், அம்மோனியா
நிலக்கரியின் கலவையை கொண்ட
பூமியின் மேற்பரப்பு
மாறி நாளாகி விட்டது

நீர் நீராவி, கார்பன் கலவைகள்
ஹலோஜன் அமிலங்கள்
போரிக் அமிலங்கள்
நுழையத் தொடங்கி விட்டன

காலநிலைக்கும்
நில அமைப்பிற்கும்
வளரும் தாவரங்கள்
காற்றின் காரணங்கள்

காற்றை எங்கே தேடுவது
வெட்ட வெளியிலா
அறிவியல் கூடத்திலா – நாம்
சுவாசிக்கும் உலகில்

க்ளோரோபாம் மயக்கநிலைக்கு
சையனைடு மரண நிலைக்கு
ஹைட்ரஜன் சையனைடு
புல்பூண்டு முளைக்காதிருக்க 

காற்றின் வகைகள்
கடவுள் வகையல்ல
சிலருக்கு தீண்டாமை – ஆயினும்
சாத்தானின் வகையல்ல

சாதிய அடுக்காய்
கட்டண தரிசனங்களை
கோயில்கள் தீர்மானித்தாலும்
காற்றே உன்னிருப்பை தீர்மானிக்கும்


காற்றுக்கு வேலியிட்டு
காசுக்கு விற்பாயோ
கனவான்களுக்கு மட்டுமென
தனிச் சரக்காய் மாற்றுவாயோ

சகலரும் சுவாசிக்க
சமுகத்தை நேசிக்க
சகாயம் செய்ய வேண்டாம்
மாசுக்குச் சாமரம் வீசாதிருங்கள்

வளி இல்லையெனில்
வலிமை நிறைந்த
வாழ்வில்லை – வாழ
வளிக் காப்போம்



2 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை
இயற்கை இல்லையேல் நாமேது

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எத்தனை தகவல்களை சிந்தித்து உள்ளீர்கள்... அபாரம்...

மேல்பாதி திரௌபதி

ஆறுகால ஆராதனையின்றி அம்மன் அவதியுறுவதாய் ஆங்கொரு புலம்பல் அரவமில்லாது ஆலயத்தை திறந்து ஆராதனை முடிந்தவுடன் மூடிடவும் பக்த கோடிகள் பக்கம் வந்த...