வெள்ளி, ஜூன் 4

எம்மை இயக்கும் ???.............

 



எம்மை இயக்கும் இறைவன்
யாரோ சிலரறிவார் போலும்
தம்மைத் தூற்றும் நாத்திகனை
தடுதாட் கொள்ளும் நாயகன்
அம்பலத்தில் அடையாள மாகிடவே
அவர்கள் ஆம்மென்று ஆவாரோ
கம்பளம் விரித்தேக் காத்திருக்கும்
கிறித்து அல்லா இந்துவல்ல

நாத்திக வாதத்தில் நாவாய்
நர்த்தன மிடுபவனும் அவனே
ஆத்திகர் அற்புதமாய் ஏய்க்க
அளித்த விளக்க மிதுவே
நித்தமும் காக்கும் இறையெனில்
நிற்கதியாய் மாளும் நிலையேனோ
துதித்தாலும் பக்தியில் லையென
துணையாய் வாரா திருந்தாரோ

இந்திரன் வருணன் என்றே
இல்லாதார் பட்டியல் நீளும்
இந்த வரிசையில் கிரேக்க
ஹீரா ஜுயஸ் தொடரும்
உந்திப் பெருக்க ஏமாற்றி
உதிரம் குடிக்கும் கூட்டத்தை
சந்தியில் நிறுத்திக் கேட்டால்
சூதாய் நம்பிக்கை என்றிடும்

நம்பிக்கை என்றே நால்வர்
நாலுச் சுவற்றுள் துதிக்க
அம்பிகை, அல்ல அவரவர்
ஆண்டவனை தடுப்பர் யாரோ
சம்புகன் ஏகலைவன் ஏமாந்த
சரித்திரம் தொடருமென நினைப்பில்
வம்பிழுக்க நாத்திகனை இயக்குவது
வரனருள் என்று ரைப்பவரோ

மற்ற இறையை மறுதலிக்கும்
மாண்புறு நாத்திகர் இவரே
முற்றும் மறுக்கும் நபரை
முட்டாள் என்றவரும் இவரே
வற்றும் அறிவால் தூற்றி
வழங்கும் பட்டங்கள் பலவே
சீற்றம் தனிந்தே சிவனருள்
சேரட்டும் என்றதனால் வாழ்கவே

2 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அறம் தெறிக்கும் வரிகள்... அருமை...

திரளழகு

திரளழகை தீபவொளி திருத்தி எழுதிட முரணேது முந்தானை முகமன் கூறிட மரகதவுடல் மச்சானை மகிழ்ச்சியில் ஆழ்திட சரசங்கள் பயின்றிட சரணடை பேரழகே நின்னசைவ...