புதன், அக்டோபர் 5
செத்தப் பின்பு
கொள்ளிச் சட்டியும்
நெய் பந்தமும்
நீராட்டும் இல்லாது
நீத்த உடல் வேகாதா
எள்ளுத் தண்ணியும்
பிண்டமும்
படைக்காட்டா - பாவி
ஆவியா சுத்துவேனா
வாழும் போதே
வகைவகையாய்
யாகங்கள் செய்யாததால்
கர்மபலன்கள் கிட்டாதோ
நாளும் கிழமையும்
நம்மை நினைத்து
நாதியில்லா எனக்கு
திதி கொடுப்பார்களா
கதியற்று எனக்கு நானே
கயாவில் பிண்டமிட்டு
காசியில் காலமானால்
கண்டிப்பாய் மோட்சம் கிட்டுமோ
கடன் பட்டு
கல்விக் கற்று
அயல் தேசம் சென்றவன்
அன்னியமாகி போனான்
எடுத்து போடுவது
யாரென அறிவோமா? – ஆனா
அடுத்தடுத்து ஆசைகள்
நிறைவேறுமா?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நோய்
நோக்கும் கண்களால் நோயைத் தந்தாய் நீக்கும் மருத்துவம் நீயேதான் என்றாய் தூக்கம் கெடுத்து துவளச் செய்தாய் தாக்கும் நினைவுகளால் தவிக்கவ...
-
கற்றைக் கூந்தலில் பூச்சூடி கட்டுடலில் ஆடைச் சூடி சிற்றிடை தன்னில் சிறையிட்டு சிந்தனையைச் செயலிழக்கச் செய்தே பற்றற்று வாழ்ந்த பாமரனை பரி...
-
இறுதி வாய்ப்பை பயன்படுத்தவில்லை என்றால் தேர்ச்சிப் பெற முடியாத தேர்வு முற்றுப் பெறும் பரவாயில்லை .... வெற்றிப் பெறும் பாடத்தில் பயிற்சி எடு...
-
நோக்கும் கண்களால் நோயைத் தந்தாய் நீக்கும் மருத்துவம் நீயேதான் என்றாய் தூக்கம் கெடுத்து துவளச் செய்தாய் தாக்கும் நினைவுகளால் தவிக்கவ...
-
நேற்று ஜெயா டிவியில் ஜாக்பட் நிகழ்ச்சியின் ஒரு பகுதி பார்க்க நேர்ந்தது. ஒரு கிலோ தங்கம் எத்தனை சவரன் கொண்டது என ஒரு கேள்வி. இது பெண்களிடம...
-
ஆதி மனிதர்கள் ஆதாம் ஏவாள் போல அவர்கள் வாழ நினைத்தனர் தேர்ந்தெடுக்க தேவனுக்கும் தேவிக்கும் வாய்பில்லாமலிருந்தது ஆளுக்காருத் திசையில் அவர்களி...
2 கருத்துகள்:
யதார்த்தம்
அப்படிக் கேளுங்க...!
கருத்துரையிடுக