வெள்ளி, மார்ச் 1
மதம்
அடிமைகளை
அடிப்படையாகக் கொண்டு
அமைவது
பிரித்தாளும்
பிரித்தானிய கொள்கைகளை
பிரதானமாய் கொண்டது
மிட்டா மிராசுகள்
மிலேச்சர்களை
மிருகங்களாய் நடத்துவது
மானுட சமூகத்தை
நால் வருணமாய்
சாதிகளாய் பிரிப்பது
குலதெய்வங்களுக்கு
வாழ்வளித்து
குடிப்பிறப்பைக் காப்பது
நீதி
தராதரத்திற்கு ஏற்ப
தராசை ஏற்றி யிறக்குவது
வேதங்கள், ஸ்மிருதிகள்
புராணங்கள் உனக்கானதென்று
உடனிருந்து வேரறுப்பது
வராக அவதாரமென
வழங்கியக் கதைகள் – உனை
பன்றியாய் நடத்தவே
திருச்சபை
400 ஆண்டுகள் கழித்து
மன்னிப்பு கோருவது
நீ இன்னும் அடிமைதானென
அக்லக்கை
கொல்ல வைப்பது
ஆண்ட பரம்பரையென
ஆண்டாண்டு கால
அடிமைதனை உறுதிப்படுத்துவது
பழைய வழக்கமென்றும்
மரபென்றும் – கண்மூடி
பின்பற்ற வைப்பது
குடுமி வைத்தவர்கள்
குலத் தொழிலை விடுத்து – அயலானிடம்
குடியுரிமைக் கோருவது
பஞ்சம சூத்திரனுக்கு
படிப்பு வாராதென
பரப்புரைச் செய்வது
அழுக்கானவர்கள்
அறிவற்றவர்கள் சூத்திரனென்றே
அவாள்களை உயர்ந்தவனாக்குவது
பைபிளையும் குரானையும்
படிக்க கொடுக்கையில் – வேதங்கள்
காதில் ஈயத்தை ஊற்றுவது
கூட்டத்தின் பெயர்களும்
குலத்தெய்வங்களும் - குறியீடு
எச்சாதி என்பதற்கு
வேதத்தையும், வேள்வியையும்
தேவ பாஷையையும் மறந்தே
கைபர் போலனைக் கடக்கிறார்கள்
நீயோ ஹோமங்களை வளர்த்து
வேதவிற்பன்னர்களின் வாழ்வை
நீட்டிக்கிறாய்
மானுடச் சமூகமென்று
பாரதி தாசனைப் பின்பற்று
மரணிக்கட்டும் சாதியும் மதங்களும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கல்நெஞ்சுக்காரி
கல்நெஞ்சென உரைத்திட , கண்ணீர் வடித்தாய் ; சொல்லொண்ணா வலிகளை சொற்களில் பதித்தாய் . அல்லலில் உழலுவதை அடிமனதில் இரசித்தாய் ; இல்லா...
-
கல்நெஞ்சென உரைத்திட , கண்ணீர் வடித்தாய் ; சொல்லொண்ணா வலிகளை சொற்களில் பதித்தாய் . அல்லலில் உழலுவதை அடிமனதில் இரசித்தாய் ; இல்லா...
-
15 வயது முஸ்லீம் பெண் தனக்கு பிடித்தவரை திருமணம் செய்து கொண்டார். உயர் நீதி மன்றம் சொல்கிறது இந்து பெண் 18வயதுக்கு குறைவாக திருமணம் செய்த...
-
வேலையற்றவர்கள் வீதிக்கு வாராது, “விதியே” என்று விடியலுக்கு தவமிருக்க, அதிகாரத்தைச் சுவைத்த ஒட்டுண்ணிகள் அதிகாரமற்றவர்களுக்கு அளித்த ...
-
தாயென்றாய் தாரமென்றாய் தெய்வமென்றாய் பெண்ணை தாரம் தாயாக தின்ன வைத்தாய் மண்ணை கரு உருவாக காதல் வேண்டும் அல்ல சோதனைக்குழாய் ...
-
உழவர்களின் உபரி வருமானத்திற்கு உதவிய பசுக்களை , கோமியம் குடிப்பவர்கள் “ கோமாதா” என்று பாதுகாக்க கோடிகளில் நிதி ஒதுக்கிட , கொள்கை மு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக