வெள்ளி, மார்ச் 1
மதம்
அடிமைகளை
அடிப்படையாகக் கொண்டு
அமைவது
பிரித்தாளும்
பிரித்தானிய கொள்கைகளை
பிரதானமாய் கொண்டது
மிட்டா மிராசுகள்
மிலேச்சர்களை
மிருகங்களாய் நடத்துவது
மானுட சமூகத்தை
நால் வருணமாய்
சாதிகளாய் பிரிப்பது
குலதெய்வங்களுக்கு
வாழ்வளித்து
குடிப்பிறப்பைக் காப்பது
நீதி
தராதரத்திற்கு ஏற்ப
தராசை ஏற்றி யிறக்குவது
வேதங்கள், ஸ்மிருதிகள்
புராணங்கள் உனக்கானதென்று
உடனிருந்து வேரறுப்பது
வராக அவதாரமென
வழங்கியக் கதைகள் – உனை
பன்றியாய் நடத்தவே
திருச்சபை
400 ஆண்டுகள் கழித்து
மன்னிப்பு கோருவது
நீ இன்னும் அடிமைதானென
அக்லக்கை
கொல்ல வைப்பது
ஆண்ட பரம்பரையென
ஆண்டாண்டு கால
அடிமைதனை உறுதிப்படுத்துவது
பழைய வழக்கமென்றும்
மரபென்றும் – கண்மூடி
பின்பற்ற வைப்பது
குடுமி வைத்தவர்கள்
குலத் தொழிலை விடுத்து – அயலானிடம்
குடியுரிமைக் கோருவது
பஞ்சம சூத்திரனுக்கு
படிப்பு வாராதென
பரப்புரைச் செய்வது
அழுக்கானவர்கள்
அறிவற்றவர்கள் சூத்திரனென்றே
அவாள்களை உயர்ந்தவனாக்குவது
பைபிளையும் குரானையும்
படிக்க கொடுக்கையில் – வேதங்கள்
காதில் ஈயத்தை ஊற்றுவது
கூட்டத்தின் பெயர்களும்
குலத்தெய்வங்களும் - குறியீடு
எச்சாதி என்பதற்கு
வேதத்தையும், வேள்வியையும்
தேவ பாஷையையும் மறந்தே
கைபர் போலனைக் கடக்கிறார்கள்
நீயோ ஹோமங்களை வளர்த்து
வேதவிற்பன்னர்களின் வாழ்வை
நீட்டிக்கிறாய்
மானுடச் சமூகமென்று
பாரதி தாசனைப் பின்பற்று
மரணிக்கட்டும் சாதியும் மதங்களும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
விவசாயம் காப்போம்
காடுமேடு திருத்தி கழனியா இருந்ததை சூடுசொரணை இல்லாது சூறையாடி விட்டு வளர்ச்சி என்று வாய்சவடால் விடுகிறான் களர்நில மானவுடன் கார்ப்பரேட்டு மற...
-
விழித்தெழு பெண்ணே வித்தைகள் கற்றிட செழித்திடும் அறிவிலே செல்லுமிடம் சிறந்திட சிறந்த கல்வியால் சிந்தனை பெருகட்டும் அறத்தின் வழியே அன்பு பர...
-
தன்னிலை மயக்கமேன் தண்ணீரில் மிதப்பதேன் உன்நிலை மறக்கவா உயிரைதான் மாய்க்கவா இன்னிலை வாடாதோ இளங்குருத்து கருகாதோ நன்னிலை உயர்வன்றோ நாநிலமும்...
-
காடுமேடு திருத்தி கழனியா இருந்ததை சூடுசொரணை இல்லாது சூறையாடி விட்டு வளர்ச்சி என்று வாய்சவடால் விடுகிறான் களர்நில மானவுடன் கார்ப்பரேட்டு மற...
-
களவுமணம் கலக்கமே காதல்களம் காண்போர்க்கு காண்போர் யாவரும் காதுபட பேசவே பேசும் செய்திகள் பெற்றோர் அறிந்திட அறிந்தும் அறியாததாய் அரண்தனை பலப...
-
விழித்தெழு பெண்ணே வித்தைகள் பழகிட பழகிடும் வேளையில் பகுத்தறிவை வளர்த்திடு வளர்ந்திட்ட அறிவால் வானத்தை களமாக்கு களத்திலே சனிதனை கோளென கொண்ட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக