செவ்வாய், ஏப்ரல் 24

கலெக்டரும் நான்காவது தூணும்


கலெக்டர் என்றால்
கண்ணு தெரியும்
காட்டுவாசி என்றால்
கண்டு கொள்ளமாட்டார்

கானகத்தில்
காட்டு வேட்டையில்
காணமால் போன
உயிரை எழுதமாட்டார்

வேட்டுவ மக்களை
வேட்டையாடி
வேறிடம் போவென்று
விரட்டிட அமைதிகாப்பார்

காட்டை கூறுபோட்டு
கணிசமாக காசு பார்க்கும்
அரசோ, அரசியல்வாதியோ
கண்மூடி வாளாயிருப்பார்

நான்காவது தூணென்று
நானிலம் முழங்கிடும்
நாணயமற்ற இப்பத்திரிக்கைளை
நாற்சந்தியில் நிறுத்தும்
       காலமெப்போது,,,,,,,,,,,,,,,,,,,,,,



1 கருத்து:

நம்பிக்கைபாண்டியன் சொன்னது…

///காட்டை கூறுபோட்டு
கணிசமாக காசு பார்க்கும்
அரசோ, அரசியல்வாதியோ////

கண்டிக்கப்படவேண்டிய விசயம், ஆனால் அதை செய்யத்தான் யாருமில்லை!(அதிகாரத்தில்)

மும்மொழிக் கல்வி

மும்மொழிக் கல்வி மூத்தக்குடி தமிழனுக்காம் முட்டாள்கள் முகாரி பாடுகிறார்கள் ஏட்டுக் கல்வி இந்தி பேசுபவர்களுக்கு இரண்டா? ஒன்றா? கேட்பது யார்? ...