ஞாயிறு, மே 4

முனீர் அகமது -மீனல்

 


மாநிலம் அறியா
மறைக்கப்பட்டத் திருமணம்
மாய வித்தைகளால்
கண்டங்கள் கடந்து அறியப்பட்டது

மாதராய் பிறப்பதற்கு
மாதவம் செய்திட வேண்டுமா
முனீரின் மீனல்
முத்தாய்ப்பாய் சொல்வாளா

பாரதியைக் கொண்டாடும்
பாரதப் புதல்வர்கள்
பாகிஸ்தான் பெண்ணை மணந்ததால்
பணிநீக்கம் செய்தனர்

பார்வைகள் பரிமாறி
பாரதத்தின் மருமகளாய்
பலதேசத்து மகளிர்
பாங்குடன் வாழ்ந்திட

பாகிஸ்தான் பகையானதால்
“பாரா மிலிட்டரி”க் காரன்
பாவம் செய்ததாய்
பஞ்சாயத்து முடிவு செய்தது

தாய்வழிச் சொந்தமென்றும்
தகுந்த ஆதாரத்தை
தக்கச் சமயத்தில் பகிர்ந்திருந்தும்
தண்டணை உறுதி செய்யப்படுகிறது

தேச அச்சுறுத்தலென
தேச பக்தர்கள்
தேசிய பத்திரிக்கைகள்
தேம்பி அழுதப்பின்

“பாரா மிலிட்டரி”க் காரனின்
பணிநீக்க உத்தரவு
பாரெல்லாம் அறிந்தபின்
பாதிக்கப்பட்டவனுக்கு அளித்தனர்

2017 -ல் பணியில் சேர்ந்து
2022 -ல் தகவல்கள் அளித்து
2024 -ல் அனுமதிப் பெற்றதாக
2025 -ல் போபாலில் கூறுகிறான்

வயிராற உண்ணவே
"பாரா மிலிட்டரி" பணி 
உயிர் போகுமென்றிந்து
ஒப்படைத்தவனின்  

தீராக் காதலை
தீவிரவாதிகளைப் போல்
தீர்த்து விடாதீர்கள்
தீர்ப்புகள் மாறட்டும்

தீவிரவாதம்
தேசத்தை மட்டுமா சீர்குலைத்தது
மேவிய காதலையும்
மூழ்கடிக்குதே

முனீர் – மீனலை
முடக்கி
மானுடத்தைக் கொல்லாதீர்
மனுநீதியென பிதற்றாதீர்


                                  அ. வேல்முருகன்

கருத்துகள் இல்லை:

அடையாளம்

ஆதி மனிதர்கள் ஆதாம் ஏவாள் போல அவர்கள் வாழ நினைத்தனர் தேர்ந்தெடுக்க தேவனுக்கும் தேவிக்கும் வாய்பில்லாமலிருந்தது ஆளுக்காருத் திசையில் அவர்களி...