ஏற்றத் தாழ்வுகள்
ஈகைக்கு காரணமா
மாற்றும் நிகழ்வுகள்
மாயத்தில் நடக்குமா
உயர்வும் தாழ்வும்
உழைப்பில் என்றால்
வியர்வை சிந்தியும்
விடியல் இல்லையே
குவியும் சொத்து
கொடுத்துச் சிவக்கவா
புவியின் ராசாவென
புன்னகை பூக்கவா
ஆண்டா னடிமை
ஆண்டாண்டாய் தொடரவா
வேண்டா வெறுப்பா
விதியென் றிருப்பதா
கிடைத்தவன் பிழைக்கவா
கீழானோன் மரணிக்கவா
படைத்தவன் செயலென
பாமரன் ஏற்பதா
மரணத்தின் வாசல்
மாறச் சொல்லுதா
இரக்கத்தின் குணமா
இங்கவை வாழுதா
ஏற்பது இகழ்ச்சியென
எடுத்தியம்பிய ஆத்திசூடி
ஆற்றார் இல்லாத
அகிலம் வேண்டியே
தானமும் தர்மமும்
தரணியில் இல்லையெனில்
மானமும் அறிவும்
மாநிலத்தில் பரவுமே
அ. வேல்முருகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக