இச்சாதியில் பிறக்க
….இடைச்சாதிக் கண்ணன் அருளோ
பொஞ்சாதி யாயிருக்க
….பெண்ணாய் இருத்தல் போதாதோ
எச்சாதியா இருக்கட்டுமே
….என்னிணை அவனாகக் கூடாதோ
என்சாதிக் கௌரவம்
….எங்களைப் பிரிக்க மீண்டிடுமோ
மனித உயிர்கள்
….மனதால் இணையக் காதல்
இனிய மலர்கள்
….இல்லறம் காண வாழ்தல்
கனிந்த இதயத்தை
….கல்லெறிந்து தாக்கச் சிதைத்தல்
ஏனிந்த ஆயுதத்தை
….ஏற்றன சாதி அரசியல்
தாழ்ந்தவன் இவனென
…..தமுக்க டிக்க யாரிவன்
தோழனை தேர்ந்தேடுத்தே
…..துணையாய் வாழ்தல் தவறோ
வாழ்வை தொடங்க
….வாழ்வழித்த சாதிவெறி – அதனை
வீழ்த்த என்னவழி
.....வீணான சாதியை விட்டொழி
சனி, ஜூலை 6
நாய்க்கன் கொட்டாய் காதல்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திரளழகு
திரளழகை தீபவொளி திருத்தி எழுதிட முரணேது முந்தானை முகமன் கூறிட மரகதவுடல் மச்சானை மகிழ்ச்சியில் ஆழ்திட சரசங்கள் பயின்றிட சரணடை பேரழகே நின்னசைவ...
-
நீ என்னை சந்திக்கும் போதெல்லாம் இறகுகள் முளைத்து பறக்கிறேன் உன்னருகாமையில் - நான் உயிரோடிருப்பதை உணர்கிறேன் என்றென்றும் எனதானவன் நீ எனது ப...
-
வேண்டாம் என்பது வேதவாக் கல்ல வேள்வியைத் தொடர வேண்டுகோள் என்றே மோகன இராகத்தில் மௌனமாய் சுரங்களை ஆனந்த பைரவியாக்கி ஆவலைத் தூண்டினேன் ஏகாந்த வ...
-
அதிர்வில்லா முத்தத்தில் ஆனந்தம் ஏதடி எதிர்பாரா வேளையில் எத்தனைச் சுகமடி உதிரம் கொதிக்க உதடுகள் துடிக்க கதிகலங்கும் முத்தத்தை கண்ணே வழங்கட...
-
நண்பரொருவர் தான் எழுதியதை என் தளத்தில் பதியுமாறு வேண்டினார் அவரின் அவா இதோ........ படைத்தவனையே சாதியால் பிரித்து வைத்தார் ஆன்மீக அறிவின்ற...
-
சிக்கந்தர் தர்கா தூணில் சிவனின் மகனுக்குத் தீபம் சி.ஐ.எஸ்.எப் சகிதம் சீக்கரம் கிளம்புங்கள் சுவாமி உளரல்கள் சட்டமாக ஊர் வேடிக்கை பார...

2 கருத்துகள்:
வீழ்வித்திட என்னவழி
வீணான சாதியை விட்டொழி//உண்மைதான்
உண்மைதான் நண்பரே
கருத்துரையிடுக