சனி, ஜூலை 6

நாய்க்கன் கொட்டாய் காதல்



இச்சாதியில் பிறக்க
….இடைச்சாதிக் கண்ணன் அருளோ
பொஞ்சாதி யாயிருக்க
….பெண்ணாய் இருத்தல் போதாதோ
எச்சாதியா இருக்கட்டுமே
….என்னிணை அவனாகக் கூடாதோ
என்சாதிக் கௌரவம்
….எங்களைப் பிரிக்க மீண்டிடுமோ


மனித உயிர்கள்
….மனதால் இணையக் காதல்
இனிய மலர்கள்
….இல்லறம் காண வாழ்தல்
கனிந்த இதயத்தை
….கல்லெறிந்து தாக்கச் சிதைத்தல்
ஏனிந்த ஆயுதத்தை
….ஏற்றன சாதி அரசியல்


தாழ்ந்தவன் இவனென
…..தமுக்க டிக்க யாரிவன்
தோழனை தேர்ந்தேடுத்தே
…..துணையாய் வாழ்தல் தவறோ
வாழ்வை தொடங்க
….வாழ்வழித்த சாதிவெறி – அதனை
வீழ்த்த என்னவழி
.....வீணான சாதியை விட்டொழி



2 கருத்துகள்:

கவியாழி சொன்னது…

வீழ்வித்திட என்னவழி
வீணான சாதியை விட்டொழி//உண்மைதான்

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

உண்மைதான் நண்பரே

திரளழகு

திரளழகை தீபவொளி திருத்தி எழுதிட முரணேது முந்தானை முகமன் கூறிட மரகதவுடல் மச்சானை மகிழ்ச்சியில் ஆழ்திட சரசங்கள் பயின்றிட சரணடை பேரழகே நின்னசைவ...