செவ்வாய், செப்டம்பர் 3

வீரமா?.............................



கற்கை நன்றே; கற்கை நன்றே;
பிச்சை புகினும் கற்கை நன்றே


பிச்சை எடுக்கும் நிலை உனக்கு ஏற்பட்டாலும் கற்றலை விட்டு விடாதே, கற்பது நன்று என வெற்றிவேற்கை கூறுகிறது

ஒரு குறும்படம் பார்க்க நேரிட்டது. 

ஏழ்மையான குடும்பம், நிலையற்ற வருமானம், அடுத்தவேளை சோறு கேள்விகுறி. பெண் குழந்தையை வகுப்பில் ஆசிரியர் வெளியே துரத்துக்கிறார். வீட்டின் நிலை கடன் வாங்கவும் தாய் தவிக்கிறார்.  ஆயினும் பிள்ளையை தூண்டுகிறார். பெண் பிள்ளையோ தன் சேமிப்பை அம்மாவிற்கு கொடுத்து உதவுகிறது.  ஆனால் தனக்கு வேண்டிய Geometry box வாங்க, கோயில் வாயிலில் அமர்ந்து பிச்சை எடுத்து வாங்கி ஆனந்தப் படுகிறது.

எதிர்மறையாக படம்பிடித்து கல்வி கற்க போராடும் நிலையை சொல்லியுள்ளார். இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது என்றும்.................................

ஆனால்

காசுள்ளவனுக்கு கல்வி என்னும் நிலையில் வாழ்கிறோம்


கல்வி அடிப்படை உரிமையன்றோ மனிதனுக்கு


ஆனால், அதை பிச்சை எடுத்தாவது படி என்ற நிலையில் உள்ளது. குறும்படம் பார்த்து கலங்கிய உள்ளங்கள், என்ன செய்ய முடியும், நாலு சொட்டு கண்ணீர்......

இதை எப்படி மாற்றுவது, பணமில்லாதவன் படிக்க முடியாது, கோடிகளில் புரள்பவன் படிப்பது மருத்துவம், இலட்சங்களில் பொறியியல், ஆயிரங்களில் கலை மற்றும் அறிவியல்.

நூறுகளில் வாழ்பவன், எட்டு, பத்தை தாண்டுவதில்லை

வாழ்வில் கடைத்தேற வாய்த்ததை படித்துவிட்டு பகற்கனவு காணுது கூட்டம்.

ஆயினும் அவரவருக்கு ஒரே நாளில் பணக்காரனாக வேண்டுமென ஆசை. அதனால்தான் சூழற்சி முறையில் ஈமு கோழித் திட்டத்தை கடந்து வந்திருக்கிறான்.

 கல்வி என்பது தனிபட்ட உரிமையா? அரசுக்கு இதில் பங்கு இல்லையா, தன் குடிகள் கற்றவர்களாக இருக்க வேண்டும் என எண்ண கூடாதா? அப்படியெனில் அரசின் வேலை குடிகளிடம் வரி வசூலிப்பது மட்டுதானா?

காலை எழுந்தவுடன் துலக்கும் பற்பசையிலிருந்து இரவு படுக்கும் மெத்தை வரை வரிசெலுத்தும் மக்கள் தான் விரும்பிய படிப்பை பிச்சை எடுத்துதான் படிக்க வேண்டும். அதற்கு வள்ளல்கள் வேண்டுமா?

ஏன் இந்த தனியார் மயம்?  யார் வாழ கல்வி தனியார் மயமானது. எதற்கு பிச்சை எடுத்து படிக்க வேண்டும்.  வரி வாங்கும் அரசல்லவா படிக்கவும் வசதி செய்து தரவேண்டும்.

அப்படி கொடுக்காத அரசு என்ன அரசு, பிச்சை எடுத்து படித்துக் கொள் என்று சொன்னால், எத்தனை பேர் பிச்சை எடுப்பான்.

அப்புறம் பிச்சைக்கார நாடு இந்தியா என்பான்

இதை நான் சொல்லவில்லை

அப்போ குறும்படம் எப்படி இருக்க வேண்டும்.  இப்போது அவர் சொல்லட்டும்


2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்லாவே சொன்னீங்க... பல கேள்விகள் சிந்திக்க வேண்டியவை...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

சிந்திக்க வேண்டிய வரிகள் ஐயா

மேல்பாதி திரௌபதி

ஆறுகால ஆராதனையின்றி அம்மன் அவதியுறுவதாய் ஆங்கொரு புலம்பல் அரவமில்லாது ஆலயத்தை திறந்து ஆராதனை முடிந்தவுடன் மூடிடவும் பக்த கோடிகள் பக்கம் வந்த...