புதன், ஆகஸ்ட் 6

“மிஸ்டு கால்”


நீயோ நானோ
நினைவுகளில் வாழ்பவர்கள் – ஆம்
நினைக்காத நாளில்லை

மறவா
மறந்தாய் – எனவெழுதும்
மடலல்ல இது

உறவா
உருகிடுவேன்
உனதருகாமையில்

சிறகோ – இச்
சிறியவளுக்கில்லை
சிந்தனை மட்டுமே

நாளும்
அழைப்பாய் – பல
கதை கதைப்பாய்

அழைக்க மறந்தாயென
அறிவிப்பில்லை – இதுவென்
அகமகிழ்ச்சிக்கொரு கோரிக்கை

உழைப்பின் வேகத்தில்
உன்னையே மறப்பவன் நீ
ஒருநொடி எனை நினைத்திட

கைப்பேசியில்
எனக்கான அழைப்பை
தவற விடு

வாய்பேசிட நினைத்ததை
கைபேசியின் பாடல்
காற்றாய் ஒலித்திடும்

காலமும் கனவும்
கரைந்திடும்
உன் நினைவில்




2 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை நண்பரே

பாலா சொன்னது…

புலவரே மிகவும் அருமை

மும்மொழிக் கல்வி

மும்மொழிக் கல்வி மூத்தக்குடி தமிழனுக்காம் முட்டாள்கள் முகாரி பாடுகிறார்கள் ஏட்டுக் கல்வி இந்தி பேசுபவர்களுக்கு இரண்டா? ஒன்றா? கேட்பது யார்? ...