செவ்வாய், ஆகஸ்ட் 12

ஒரு வாரக் கொண்டாட்டம்



இறந்தவனுக்கு திவசம்
இரத்த சம்பந்தக்காரன்
ஒருநாள் செய்வான்

முடியாட்சி மன்னனெனில்
குடிமக்கள் அனைவரும்
கூடி அழுவர்

இன்றுதான் இறந்தான்
என்றிருந்தாலோ
ஏழுநாள் துஷ்டிக்கலாம்

பாட்டன் காலத்தில்
பாடையில் சென்றவனை - இன்று
சுடலையில் தூக்கி நிறுத்தலாமா

கருவறை தன்னில்
கல்லறை ஆனதை
கடபாரையால் எழுப்பலாமா

மறைந்திருந்து கொன்றான்
மாரீச மாயமான் என்றறியா
அயோதிராமன் – வாலியை

சுற்றறிக்கை அனுப்பியே
சுத்திரனையும் சமமாக்கி
சமஸ்கிருதம் படியென்கிறான்

திரேதா யுகமோ
கலியுகமோ – சமஸ்கிருதம்
உனக்கு புரியுமோ?!

நந்தனுக்கு திறக்கா வாயிலும்
தமிழுக்கு கிடைக்கா சிற்றம்பலமும்
ஒருவாரத்தில் கிடைக்க வைப்போமோ?

மூத்த தமிழ் காத்திடவே
மூக்கறுப்போம்
ஸ்ரீதேவி ஆனாலும்




1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

///பாட்டன் காலத்தில்
பாடையில் சென்றவனை - இன்று
சுடலையில் தூக்கி நிறுத்தலாமா///
அருமையாகச் சொன்னீர்கள் நண்பரே

மும்மொழிக் கல்வி

மும்மொழிக் கல்வி மூத்தக்குடி தமிழனுக்காம் முட்டாள்கள் முகாரி பாடுகிறார்கள் ஏட்டுக் கல்வி இந்தி பேசுபவர்களுக்கு இரண்டா? ஒன்றா? கேட்பது யார்? ...