திங்கள், செப்டம்பர் 15

சிவன் சொத்து குலநாசம்



நூற்றிருபந்தைந்து பேருக்கு
இட்ட சாபம்
குலநாசம்

செந்தில் வேலவன் பெயரில்
செய்திதாளில் விளம்பரம்
சிவனின் மைந்தனாயிருக்கலாம்

அக்னி செரூபமான
அண்ணாமலையாரை
அவர்கள் ஏமாற்றினார்களாம்

பிள்ளையின் தலையை கொய்தவன்
பக்த பிள்ளைகள் – உங்களை
மொய் எழுத சொல்கிறான்

தாயும் சேயுமானாலும்
வாயும் வயிறும் வேறுதானே – அதனால்
வாய்தா கொடுத்திருக்கிறான்

ஆறுகால உணவின்றி
அவனை வாடவிட்டால்
ஆறு’கால’ செய்திவரும்

மெய்யான உலகில்
மெய்யான உங்களை
மொய் எழுதி வாழச் சொல்கிறான்

பிட்டுக்கு மண் சுமந்தவனை
பிள்ளைகள் ஏமாற்றலாமோ?
பிடி சாபமென்கிறான்

சாபத்திற்கு
சன்மானம் அளித்தால்
சாப விமோசனம்

எட்டாயிரத்திற்கும்
இரண்டு கோடிக்கும்
சமத்துவமாய் சாபம்

முக்கண் நாயகனே
உமக்கு பட்டா அளித்த
வட்டாச்சியர் யார்?

உமக்கு முன்
உரிமை கொண்டாடிய
பட்டாதாரர் யார்?

ஆதியும் அந்தமுமில்லா
ஆறுமுகனின் தகப்பனே – உரூரின்
ஆதிதான் யாதோ?

பட்டா மாற்ற – நான்
பட்டபாடு – நீயும்
பட்டாயோ?

காஞ்சி காமாட்சி
மதுரை மீனாட்சி
மயிலை கபாலியோடு

மூவடியில் உலகலந்தவனுக்கும்
பூவுலகில் நிலமெதற்கு
கோடிகளில் புரள்வதற்கா?

ஆண்டையா? ஆண்டவனா? – அல்ல
அடுத்தவன் உழைப்பில் வாழும்
தஞ்சாவூர் மிராசா?

ருத்ரபூமி பொறம்போக்கு
மாத்திரமே – உனது
சொத்தென் றிருந்தேன்

சுடலையை விட்டு
சுற்றி சுற்றி – வளைத்த
சொத்தின் விபரம் இதுதானோ

தலையாறு கொண்டவனுக்கும்
தலையை கொய்தவனுக்கும்
எல்லையில்லா சொத்திருப்பதால்

அவ்வை பள்ளி – உன்
பிள்ளைக்கு பிடிக்குமென
நடத்துகிறோம்

அதற்கு கோடிகளில்
பங்கு கேட்பதா?
சங்கரனே உமது குலமென்ன?





1 கருத்து:

அ. வேல்முருகன் சொன்னது…

இன்று இராயபேட்டையை சேர்ந்தவர்களுக்கு சாபம்

மேல்பாதி திரௌபதி

ஆறுகால ஆராதனையின்றி அம்மன் அவதியுறுவதாய் ஆங்கொரு புலம்பல் அரவமில்லாது ஆலயத்தை திறந்து ஆராதனை முடிந்தவுடன் மூடிடவும் பக்த கோடிகள் பக்கம் வந்த...