வெள்ளி, மார்ச் 28
விவசாயம் காப்போம்
காடுமேடு திருத்தி
கழனியா இருந்ததை
சூடுசொரணை இல்லாது
சூறையாடி விட்டு
வளர்ச்சி என்று
வாய்சவடால் விடுகிறான்
களர்நில மானவுடன்
கார்ப்பரேட்டு மறையுறான்
சீர்காழியில்
சிதைந்தன நிலங்கள்
சிலகோடி டாலர் ஈட்டி
இறால் பண்ணைகளாய்
இன்றவை தரிசாக - அல்ல
என்றென்றும் தரிசானது
ஏமாந்தது விவசாயியல்ல
எல்லோருமே
கமலையில் நீரிறைத்து
கழினியிலே சேடையோட்டி
களத்திலே நெல்நிறைத்த
காலமெங்கே போச்சு
கருங்கல் கட்டிடமா
கழனியெல்லாம் மாறுது
காசு கிடைக்கிறதென
கண்மூடிக் கொண்டதனால்
வேம்பு, புளியமரங்கள்
வீதியை அகலமாக்க
வீழ்த்தப் பட்டது
வெயிலோ அதிகரித்தது
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
அரிதான நெல்வகையை
அடுத்த தலைமுறைக்கு
அவரவர் பாதுகாக்க
மண்ணெல்லாம்
மலடாச்சு பூச்சுக்கொல்லியால்
என்னவெல்லாம் செய்யலாம்
நம் விவசாயம் காக்க
அ. வேல்முருகன்
களவுமணம்
காதல்களம் காண்போர்க்கு
காண்போர் யாவரும்
காதுபட பேசவே
பேசும் செய்திகள்
பெற்றோர் அறிந்திட
அறிந்தும் அறியாததாய்
அரண்தனை பலப்படுத்திட
பலப்படுத்திய செய்தியை
பரிதவிப்பாய் தெரிவித்திட
தெரிந்த தலைவன்
தேவியை மீட்டிட
மீட்டிய இராகத்தில்
மேளதாளம் முழங்கிட
முழங்கிய வேகத்தில்
முத்தங்கள் பரிமாறிட
பரிமாறிய முத்தங்கள்
பாற்கடலாய் உருமாற
உருமாறிய உத்தமி
ஊணுறக்கம் மறந்தாள்
மறக்க முடியுமா?
மன்னவன் பரிசை
பரிசின் காரணம்
பற்றிய களவுமணமே!
அ. வேல்முருகன்
செவ்வாய், மார்ச் 11
மெல்லியலாள் மேதினியை ஆளட்டும்

வித்தைகள் கற்றிட
செழித்திடும் அறிவிலே
செல்லுமிடம் சிறந்திட
சிறந்த கல்வியால்
சிந்தனை பெருகட்டும்
அறத்தின் வழியே
அன்பு பரவட்டும்
பரவும் செய்தியால்
பந்தங்கள் உருவாகட்டும்
அரசும் விழித்து
ஆற்றலை மெச்சட்டும்
மேச்சிடவே மெல்லியலாள்
மேதினியை ஆளட்டும்
அச்சாணி அவளென்றே
ஆன்றோர் வாழ்த்தட்டும்
வாழ்த்தில் மயங்காது
வாழ்க்கை தொடரட்டும்
ஏழ்மையை எதிர்கொள்ள
எல்லையை வகுக்கட்டும்
வகுக்கும் திட்டங்களால்
வாழ்வை மாற்றிடு
மகுடமாகும் உனக்கது
மகிழ்ச்சியாகும் மக்களுக்கு
அ. வேல்முருகன்
தன்னிலை மயக்கமேன்
தண்ணீரில் மிதப்பதேன்
உன்நிலை மறக்கவா
உயிரைதான் மாய்க்கவா
இன்னிலை வாடாதோ
இளங்குருத்து கருகாதோ
நன்னிலை உயர்வன்றோ
நாநிலமும் மதிக்குமன்றோ
ஈட்டிய வருமானம்
ஈரற்குலை எரிக்கவா
வேட்டி அவிழ்ந்திட
வெட்கமின்றி சரியிற
நாட்டியம் ஆடுற
நாயோடு உறங்குற
போட்டியான உலகில்
பொறுப்பின்றி திரியுற
ஆறுகால பூசையிலே
அயர்ந்துறங்கும் கடவுளும்
ஊருலகம் உறவுமுறை
உன்நலம் காக்காது
கருவூலம் நிறைந்திட
கப்பம்தனை கட்டாதே
அருமையான வாழ்வுதனை
அறைகுறையா வாழாதே
அ. வேல்முருகன்
புதன், மார்ச் 5
விழித்தெழு பெண்ணே
பழகிடும் வேளையில்
பகுத்தறிவை வளர்த்திடு
வளர்ந்திட்ட அறிவால்
வானத்தை களமாக்கு
களத்திலே சனிதனை
கோளென கொண்டாடு
கொண்டாட ஏழரை
கோலெடுத்து தண்டிக்கலாம்
தண்டிக்க எதிர்திடு
தரவுகளால் நிறுவிடு
நிறுவிட இராகுகேது
நிலவிற்குள் உறங்காது
உறங்கும் யாரையும்
உணர்வுட்டி எழுப்பிடு
எழுந்தால் சோதிடம்
எங்கும் வாழாது
வாழாத எதுவும்
வழக்கொழிந்து போகும்
போனபின் அறிவியலாய்
போலிகள் சான்றிடுவர்
சான்றுகள் சாட்சியின்றி
சாக்காட்டை நோக்கட்டுமே
அ. வேல்முருகன்
திங்கள், மார்ச் 3
விழித்தெழு பெண்ணே
விழித்தெழு பெண்ணே
வித்தைகள் கற்றிட
செழித்திடும் அறிவிலே
செல்லுமிடம் வெல்லடி
ஊழியல்லக் கண்ணே
உளவுறுதிக் கொள்ளடி
வாழியென வையகம்
வாழ்த்தும் பாரடி
கற்பெனப் பெண்மையை
கடைவீதிச் சரக்காக்கி
விற்பனைக் கென்றே
விதவிதமாய் அலங்கரிப்பர்
அற்பமென ஒதுக்கிடு
அறிவின் துணைகொண்டு
கற்பனையை விலக்கிடு
காரியத்தில் சிறந்திடு
பேரண்டப் பால்வீதியில்
பேரிளம் பெண்வசிக்க
ஆரத்தில் முத்தொன்றை
ஆசையா கேட்பாயோ
தாரமாகி தாம்பத்தியம்
தக்கதென இருப்பாயோ
பூரணமாகி பூவுலகின்
புலரியா ஒளிர்வாயோ
சூழ்ந்திடும் சூழலின்
சூட்சமத்தை அறிந்திடு
வாழ்வு ஒன்றென
வாய்மையுடன் இருந்திடு
வீழ்வதோடு முடிவதல்ல
விருப்பமுடன் எழுந்திரு
வாழ்வதற்கு வழியுமுண்டு
வானமதை பிடித்திடு
அ. வேல்முருகன்
தானமும் தர்மமும்
ஏற்றத் தாழ்வுகள் ஈகைக்கு காரணமா மாற்றும் நிகழ்வுகள் மாயத்தில் நடக்குமா உயர்வும் தாழ்வும் உழைப்பில் என்றால் வியர்வை சிந்தியும் விடியல் இல்ல...

-
காடுமேடு திருத்தி கழனியா இருந்ததை சூடுசொரணை இல்லாது சூறையாடி விட்டு வளர்ச்சி என்று வாய்சவடால் விடுகிறான் களர்நில மானவுடன் கார்ப்பரேட்டு மற...
-
கேலிக் கூத்துக்கள் காலிப் பெருங்காயமாச்சு புலிச் சிங்கமில்லை மலிவான மனிதனென்றே உச்ச நீதிமன்றம் எச்சரித்து விட்டப் பின்னும் எச்சமாக ஏனின்னு...
-
களவுமணம் கலக்கமே காதல்களம் காண்போர்க்கு காண்போர் யாவரும் காதுபட பேசவே பேசும் செய்திகள் பெற்றோர் அறிந்திட அறிந்தும் அறியாததாய் அரண்தனை பலப...
-
விழித்தெழு பெண்ணே வித்தைகள் கற்றிட செழித்திடும் அறிவிலே செல்லுமிடம் சிறந்திட சிறந்த கல்வியால் சிந்தனை பெருகட்டும் அறத்தின் வழியே அன்பு பர...
-
கருப்பு அங்கிகளின் கௌரவம் காக்கும் தேவதையின் துலாக்கோல் கண்கட்டு வித்தை விருப்பு வெறுப்பின்றி விறுவிறுப்பான வியாபாரம் வ...