செவ்வாய், மார்ச் 11

மெல்லியலாள் மேதினியை ஆளட்டும்






விழித்தெழு பெண்ணே
வித்தைகள் கற்றிட
செழித்திடும் அறிவிலே
செல்லுமிடம் சிறந்திட

சிறந்த கல்வியால்
சிந்தனை பெருகட்டும்
அறத்தின் வழியே
அன்பு பரவட்டும்

பரவும் செய்தியால்
பந்தங்கள் உருவாகட்டும்
அரசும் விழித்து
ஆற்றலை மெச்சட்டும்

மேச்சிடவே மெல்லியலாள்
மேதினியை ஆளட்டும்
அச்சாணி அவளென்றே
ஆன்றோர் வாழ்த்தட்டும்

வாழ்த்தில் மயங்காது
வாழ்க்கை தொடரட்டும்
ஏழ்மையை எதிர்கொள்ள
எல்லையை வகுக்கட்டும்

வகுக்கும் திட்டங்களால்
வாழ்வை மாற்றிடு
மகுடமாகும் உனக்கது
மகிழ்ச்சியாகும் மக்களுக்கு


                                  அ. வேல்முருகன்



கருத்துகள் இல்லை:

நளினம்

  கற்றைக் கூந்தலில் பூச்சூடி கட்டுடலில் ஆடைச் சூடி சிற்றிடை தன்னில் சிறையிட்டு சிந்தனையைச் செயலிழக்கச் செய்தே பற்றற்று வாழ்ந்த பாமரனை பரி...