திங்கள், ஜூன் 2

அறிந்தும் அறியாதது

 









முற்பனிக் காலத்தில்
முத்தழல் பற்றியெரிய
முக்கனிச் சுவையை
முக்காலமும் தேடிட

இணையாய் வாழ
இசைந்தோர் ஒப்பந்தம்
இச்சையும் இடங்கொடுக்க
இடைக்கட்டு நெகிழ்ந்தது

இணக்கம் ஓரிரவா
இன்னுமின்னும் எனும்வரையா
பிணக்குத் தோன்றிட
பிரிவினை வழித்துணையா

எண்ணங்கள் வேறாகி
எதிர்பார்ப்புக் கூடிட
வண்ணங்கள் மாறியே
வருத்தங்கள் உருவாக

முத்தங்கள் பரிமாறி
முந்தானைப் பிடித்திட்ட
முத்தொழில் கற்றவனே
முற்றும் அறியாதாபோது

அம்மணம் அறிந்ததால்
அவள்மனம் அறிந்தாயோ
அங்ஙனமெனில் அவளால்
அங்கீகரிக்கப் படாதவனே

அகத்திணை அறிய
அன்போடு உறவாடு
அகதியாகா திருக்க
அளவளாவு ஆசையோடு

                                   அ.வேல்முருகன்

கருத்துகள் இல்லை:

திரளழகு

திரளழகை தீபவொளி திருத்தி எழுதிட முரணேது முந்தானை முகமன் கூறிட மரகதவுடல் மச்சானை மகிழ்ச்சியில் ஆழ்திட சரசங்கள் பயின்றிட சரணடை பேரழகே நின்னசைவ...