புதன், மே 21

நளினம்

 













கற்றைக் கூந்தலில் பூச்சூடி
கட்டுடலில் ஆடைச் சூடி
சிற்றிடை தன்னில் சிறையிட்டு
சிந்தனையைச் செயலிழக்கச் செய்தே
பற்றற்று வாழ்ந்த பாமரனை
பரிதவிக்க விட்ட பாவைநின்
கொற்றத்தில் ஆட்பட்ட என்னை
கொஞ்சிட தடைகள் ஏனடியோ


நளின அசைவுகளில் அதிர்ந்தது
நாடோ நிலமோ அல்ல
ஒளியின் அழகை ஒய்யாரி
ஒருத்தியால் பெற்ற நானே
களிறும் காளையுங் கடக்க
காதல் கொண்ட நானோ
துளிரு மன்பால் வேண்டுகிறேன்
துணையாய் வாடி வாழ்ந்திடவே

                                     அ. வேல்முருகன்


கருத்துகள் இல்லை:

பாரத் மாதா கீ ஜெய்

    சிக்கந்தர் தர்கா தூணில் சிவனின் மகனுக்குத் தீபம் சி.ஐ.எஸ்.எப் சகிதம் சீக்கரம் கிளம்புங்கள் சுவாமி உளரல்கள் சட்டமாக ஊர் வேடிக்கை பார...