பாலஸ்தீனக் குழந்தைகள்
பசியாறத் துடிக்கும்
ஓலமின்னும் ஞாலத்து
மக்களுக்கு கேட்கலியோ?
இஸ்ரேலிய ஏவுகணைகளின்
இரக்கமற்றக் கொலைகளை
ஆசீர்வதிப்பீரோ?... ஐயோவென
ஆர்ப்பரித்து எதிர்ப்பீரோ
மாண்ட மக்களுயிர்
அண்டை நாடுகளை
ஏனடாவெனக் கேட்காது
மோனநிலையில் வைத்தது யார்?
உதவிக் கரம்தனை
ஒடுக்கும் நெதன்யாகுவைத்
தடுக்கும்வழித் தெரியலையோ
தடுமாறித்தான் நிற்குரியோ
அமெரிக்காவின் ஐ. நா. வும்
ஆயுளோடிருப்பதாக அரற்றுது
ஹமாஸும், ஈரானும்
அவர்களிருப்பதாய் காண்பிக்குது
யாரிருந்து என்னசெய்ய
ஒருவேளைச் சோற்றுக்குப்
பெண்டுப் பிள்ளைகள்
போராடிச் சாகுதே
பட்டினிக் கொடுமைதனை
பதறும் காணொளிகளாய்
பாரெல்லாம் சுற்றினாலும்
பதறாமல் விடிகிறதே
அகதி முகாம்களும்
மருத்துவ மனைகளும்
கொலைகள இலக்காக
கூசும் பொய்களோடு
தொண்டு நிறுவனங்களின்
தொடர் உதவிகள்
தொடரக் கூடாதென
இஸ்ரவேலர்கள் தீர்மானிக்க
பிழைப்போமா எனவறியா
பின்னொரு விடியலில்
உழைக்கவும் கற்கவும்
உயிரைக் காக்குதே
மண்ணாசை மரணங்கள்
மகுடங்களை தக்கவைக்க
மரணங்கள் மகுடங்களை
மண்ணில் புதைக்காதோ
பசியாறத் துடிக்கும்
ஓலமின்னும் ஞாலத்து
மக்களுக்கு கேட்கலியோ?
இஸ்ரேலிய ஏவுகணைகளின்
இரக்கமற்றக் கொலைகளை
ஆசீர்வதிப்பீரோ?... ஐயோவென
ஆர்ப்பரித்து எதிர்ப்பீரோ
மாண்ட மக்களுயிர்
அண்டை நாடுகளை
ஏனடாவெனக் கேட்காது
மோனநிலையில் வைத்தது யார்?
உதவிக் கரம்தனை
ஒடுக்கும் நெதன்யாகுவைத்
தடுக்கும்வழித் தெரியலையோ
தடுமாறித்தான் நிற்குரியோ
அமெரிக்காவின் ஐ. நா. வும்
ஆயுளோடிருப்பதாக அரற்றுது
ஹமாஸும், ஈரானும்
அவர்களிருப்பதாய் காண்பிக்குது
யாரிருந்து என்னசெய்ய
ஒருவேளைச் சோற்றுக்குப்
பெண்டுப் பிள்ளைகள்
போராடிச் சாகுதே
பட்டினிக் கொடுமைதனை
பதறும் காணொளிகளாய்
பாரெல்லாம் சுற்றினாலும்
பதறாமல் விடிகிறதே
அகதி முகாம்களும்
மருத்துவ மனைகளும்
கொலைகள இலக்காக
கூசும் பொய்களோடு
தொண்டு நிறுவனங்களின்
தொடர் உதவிகள்
தொடரக் கூடாதென
இஸ்ரவேலர்கள் தீர்மானிக்க
பிழைப்போமா எனவறியா
பின்னொரு விடியலில்
உழைக்கவும் கற்கவும்
உயிரைக் காக்குதே
மண்ணாசை மரணங்கள்
மகுடங்களை தக்கவைக்க
மரணங்கள் மகுடங்களை
மண்ணில் புதைக்காதோ
அ. வேல்முருகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக