புதன், ஜூலை 30

அகங்கார ஆட்டம்

 
















அதிகாரம்
அகங்காரத்தில்
ஆட்டம் போடுகிறது

எல்லையற்ற
எத்தேசதிகாரத்தால்
எதிரியை அடக்க நினைக்கிறது

இழப்பதற்கு
ஏதுமில்லாததால்
எதிரியோ எதிர்த்து நிற்பர்

வீரனைக் கோழையென்று
விவாதித்து
வீணில் மகிழ்வர்

ஊரெல்லாம் தூற்றினாலும்
உறுத்தல் இல்லாது
உலா வருவர்

நடுக்கத்தை
நாற்காலியில் அமர்ந்து
நகையாடி மறைப்பர்

வேதத்தை துணைக்கழைத்து
கொலைக்கானத் தண்டணை
இல்லையெனத் தீர்ப்பெழுதுவர்

பரிபாலினத்தை
பக்கச் சார்புடன்
பகிரங்கமாய் செய்வர்

இயற்கை நீதியின்
இறக்கொடித்து
இறைத் தீர்ப்பென்று கூறுவர்

இத்தனையும் யாதென்று
இங்கிருப்போர் கேட்போரானால்
இதுதான் நாட்டுநடப்பு என்பேன்

அ. வேல்முருகன்

கருத்துகள் இல்லை:

திரளழகு

திரளழகை தீபவொளி திருத்தி எழுதிட முரணேது முந்தானை முகமன் கூறிட மரகதவுடல் மச்சானை மகிழ்ச்சியில் ஆழ்திட சரசங்கள் பயின்றிட சரணடை பேரழகே நின்னசைவ...