இப்படியெல்லாம்
இந்தியாவின் அண்டை நாட்டில்
இருப்பார்களா மக்கள்
இலங்கை, பாக்கிஸ்தான்
வங்கதேசம் என்றிருந்தது
நேபாளம் வரை வந்து விட்டது
மாடமாளிகைகள்
மந்திரிகளின் வாரிசுகளின்
மகோன்னத வாழ்வு
எளிய மக்களிடம்
ஏன் தீப்பற்ற வைத்தது
சமூக ஊடகங்களை தடுத்ததாலா
அடுத்தாத்து
அடுப்பங்கரையில்
ஏதேனும் புகை…………
மணிப்பூரில்
மாதக்கணக்கில் புகைந்திருக்க
மானுடம் மயங்கிதான் கிடந்தது
அத்தனை அமைப்புகளும்
அடிபணிந்து கிடக்கும் போது
புகையாவது? புடலங்காயாவது?
மக்கள் எழுச்சி
மகுடம் தரித்தவர்களை
மட்டுமா மாற்றும்
மாற்றுச் சிந்தாந்தம்
மக்கள் ஒவ்வொருவரையும்
வாழ்விக்க வாராதோ?
அ. வேல்முருகன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக