திங்கள், ஜூன் 4

ஊடலும் கூடலும்

 



ஊடி யவரை உணராமை வாடிய 
வள்ளி முதலரிந் தற்று.                                                  குறள் 1304

வாடிய கொடிக்கு
வாளி நிறைய
நீருற்றுவது போல்

கொண்ட கோபம்
குறைய
கூடி மகிழ்

அஃதன்றி
கோபம் கூடின்
கொடு வாளால்
கொடி சாய்ப்பதாகும்

2 கருத்துகள்:

Senthil சொன்னது…

இந்த திருக்குறள் வரிகள் மற்றும் உங்களது கவிதை அனைத்து விதமான உறவுகளுக்கும் பொருந்தும் என்பது எனது கருத்து. அனைத்து வரட்டு கௌரவத்தையும் துறந்து தானாக முன்வந்து அனைத்து பிறச்சினைகளையும் களைந்தால் அமைதி, சந்தோஷம் நமதே.

சிவகுமாரன் சொன்னது…

அருமையான விளக்கக் கவிதை.

திரளழகு

திரளழகை தீபவொளி திருத்தி எழுதிட முரணேது முந்தானை முகமன் கூறிட மரகதவுடல் மச்சானை மகிழ்ச்சியில் ஆழ்திட சரசங்கள் பயின்றிட சரணடை பேரழகே நின்னசைவ...