ஞாயிறு, ஜூன் 22

திருமணமாம் திருமணமாம்



கந்தர்வ மணத்தில்
கவர்ந்த இணையின் – கை 
கோர்த்துக் கொள்ளுதல்

பொன்னும் பொருளும்
புகையும் மந்திரமும்
கன்னிகா தானத்தில்

எண்ணும் எழுத்தும்
கண்ணே நீதானென – உறுதி
ஏற்பதொரு சீர்திருத்ததில்

ஊட்டி வளர்த்தவள்
உறுதிமொழி கூறிட – மன்றல்
நடப்பதொரு சமூகத்தில்

மாலை மட்டுமே மாற்றி
தாலியை மறுத்து
இணைவது தன்மானத்தில்

நட்பில் நால்வர்
நல்லதொரு சாட்சியாக – இணைவது
பதிவு மணத்தில்

தேகமிணைய - நேரம்
தோஷமில்லையென
இணைந்தது ராகுகாலத்தில்

இணையாய் சேர்ந்திருப்போம்
இனிதாய் இருக்கும்வரை
இன்றைய தினத்தில்
  
கூட்டத்திற்கு ஒருவழியென
கூறிடுவர் பலவழி – ஆயினும்
கூடுதலே குறி என்பதனால்

வைதிக வழியென்றும்
வழிவழியான தொன்மையென்றும்
பழமையை தொடராது

எளிய நிகழ்வாய்
எவர் காலிலும் வீழாது
எதிர்காலம் தொடங்கு

தந்தை மடியிலமர்ந்து
தாரை வார்த்து
தந்த கன்னியனாலும்

மணமக்கள் சந்திக்காமல்
நிக்காஹ் நிறைந்ததாய்
ஜமாத் அறிவித்தாலும்

மோதிரம் மாற்றி
முத்தமிட்டு வாழ்வை
வித்திட்டுக் கொண்டாலும்

அருமைக்காரர்
அந்தணன், சாத்தாணி
வள்ளுவன், சைவக் குருக்கள்

நாவிதர், அம்பட்டர்
நாட்டாண்மைகாரர்
நடத்தி வைத்தாலும்

இருவர் இணையும்
இல்லற விழாவன்று – இணைவை

இவ்வுல மேற்கும் விழா

மேல்பாதி திரௌபதி

ஆறுகால ஆராதனையின்றி அம்மன் அவதியுறுவதாய் ஆங்கொரு புலம்பல் அரவமில்லாது ஆலயத்தை திறந்து ஆராதனை முடிந்தவுடன் மூடிடவும் பக்த கோடிகள் பக்கம் வந்த...