செவ்வாய், அக்டோபர் 7

இதழின் கேள்வி



பற்றி இழுத்திட
  பாவையிதழ் பணித்திட
கற்றிடக் காமம்
 கலையெனத் தொடர்ந்திட
பெற்றச் சுகமோ
  போதையா மயங்கிட
வற்றா ஆசையோ
   வாழ்வைச் சுகமாக்கிட

முல்லை இதழாள்
  மூச்சடக்க முடியாது
எல்லை இதுவென
  இவனிடம் சொல்லிட
சொல்லை மதித்து
   சும்மா இருந்திட
"கல்லா"  மாமனே
  கருத்தாய் கேட்கிறாள்

கருத்துகள் இல்லை:

பனிவிழும் மலர்வனம்

பனிவிழும் மலர்வனம் பரிதியெழ மனங்கவரும் இனியன நிகழும் இணையென நீயாக எனினும் ஏந்திழையே எங்குனைக்  காண்பேன் கனிவுடன் வந்தென் கரம்தனைப்  பற்றுவா...