செவ்வாய், அக்டோபர் 21

ஆங்கிலம்












அறிவா அற்புதமா
அறிவியலா அஞ்ஞானமா
புரியாச் சொற்பதமா
புரியயவை சாதகமா
தெரியா மொழிகள்
தேவையா சுமையா
சராசரிக்குச் சரியாகுமா
சாப்பாட்டின் பொருளாகுமா

ஆறாயிரம் மொழியில்
ஆண்ட மொழியானதால்
தராதரம் வந்ததா
தமிழும் தாழ்ந்ததா
திராவிட வேராய்
திகழும் தமிழ்மொழி
பரவட்டும் திக்கெட்டும்
பழகிடுவோம் செம்மொழி

மொழியொரு வழியே
மானுடத் தொடர்புக்கு
மொழியா யாவும்
மூடிவைத்தப் பாலாகும்
இழிவா உயர்வா
இதுவென் மொழியென்றிட
தெளிவாய்ப் பகர்வாய்த்
தேன்தமிழ் நம்மொழியென

சிந்தனை மொழிக்கல்ல
சீர்தூக்கி ஆயும் மனிதனுக்கே
நிந்தனை வழியல்ல
நினது மொழியும் வாழட்டுமே
நந்தனை எரித்து‘
நாயன்மா ராக்க வேண்டாமே
நம்தமிழை வளர்க்க
நாமொன்றும் நாண வேண்டாமே

கண்மூடித் தாய்தமிழில்
கண்டதும் இல்லையெனத் தூற்றாமல்
கண்டுபிடிக் கல்வியறிவில்
காணும் பொருளின் சொற்பொருள்
சென்றுபடி மேலதேயம்
சிறப்பான எதையும் கற்றுவா
கற்கண்டுத் தமிழ்மொழியில்
கற்றதைப் பரப்பு வெற்றிபார்

அம்மொழியில் பேசிடவே
ஆனந்தமா அல்ல பெருமையா
செம்மொழித், தமிழுனுக்கு
சேந்தேள் விஷமா கூறுமைய்யா
பன்மொழிப் புலமை
பண்படுத்த வேண்டுமே உன்னை
என்மொழிப் பெருமை
எவரும் பேசிடப் பெருகுமே

ஆங்கிலமொரு மொழிதான்
அதுபோலவே கிரேக்கமும் சீனமும்
இங்கிதமாய்க் கூறாதே
இகலோகம் சுற்றிட உதவாதென
எங்கெல்லாம் போவாய்
எதற்காய்ப் போவாயென சொல்லிடேன்
அங்கெல்லாம் நீபேசும்
ஆங்கில அழகைப் பார்த்திடுவேன்

கருத்துகள் இல்லை:

பனிவிழும் மலர்வனம்

பனிவிழும் மலர்வனம் பரிதியெழ மனங்கவரும் இனியன நிகழும் இணையென நீயாக எனினும் ஏந்திழையே எங்குனைக்  காண்பேன் கனிவுடன் வந்தென் கரம்தனைப்  பற்றுவா...