புதன், அக்டோபர் 8

ஊடல்





வேல்விழியால் வேதனை
   வேண்டா என்பதா வேலவனை
வீண்பழியால் சோதனை
   விண்ணப்பமே மன்னிப்பாயா காவலனை
இல்வாழ்வில் ஊடலே
   ஏனிந்த தண்டனை ஏந்திழையே
ஏனென்று கேட்டாலே
   என்மனம் ஆறுமே மாறுமே

மெளனமா உனதுமொழி
    மடைதிறந்த மார்கழி சங்கீதமே
பௌதிக பார்வைதானே
   பாவையுனை பற்றிட வைத்தது
கெளதமனா ஆசைதுறந்து
   காசிராமே ஸ்வரம் சென்றிட
ரௌத்திரம் வேண்டாமடி
   ராசியாகி ராஜசுகம் தேடுவோமடி

திரளழகு

திரளழகை தீபவொளி திருத்தி எழுதிட முரணேது முந்தானை முகமன் கூறிட மரகதவுடல் மச்சானை மகிழ்ச்சியில் ஆழ்திட சரசங்கள் பயின்றிட சரணடை பேரழகே நின்னசைவ...