சனி, மார்ச் 27

சிந்தை கவர்....

 




பிடியிடையும் பின்னலும்
     பின்னழகைச் சொல்லிட
நாடியின் ஓட்டத்தை
     நாயகி நிறுத்திட
தோடிக்கு ஆடிடும்
     தோகையின் அழகை
கோடிக் கவியிங்கு
      கோட்பாடின் றிபாடிட


சுயம்வரத் தேடலுக்கு
     சுந்தரி நின்றாளோ
பாயிரம் பாடிட
    பலகவி வந்தாரோ
ஆயிரம் ஆசைகள்
    அவனவன் மணாளனாக
ஆயினும் ஆயிழை
    அடியேனை நாடுவாள்

இல்லாள் மகிழ.....

கட்டியவளைக் கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டு காதலடி எனச் சொல் கவளச் சோறெடுத்து காயும் நிலவொளியில் காதலாய் ஊட்டிவிட அறிவாய் அரிவையின் பார்...