சனி, ஏப்ரல் 5

பனிவிழும் மலர்வனம்















பனிவிழும் மலர்வனம்
பரிதியெழ மனங்கவரும்
இனியன நிகழும்
இணையென நீயாக

எனினும் ஏந்திழையே
எங்குனைக்  காண்பேன்
கனிவுடன் வந்தென்
கரம்தனைப்  பற்றுவாயா

தனித்திருக்கும் தலைவனோடு
தாம்பூலம் தரிப்பாயா
நுனிநாக்குச் சிவந்ததை
நுட்பமாய்  சொல்வாயா

பனிக்காலம் உன்மேனி
பரிபாலிக்க நானாச்சு
வேனிலான் வேட்கையுடன்
விளையாடிட விழாவாச்சு

பொழிப்புரை ஒன்றை
பொருட்சுவை யுடனுரைக்க
விழியோ வினவியது
விடைதனை அறிந்ததும்

செழித்த அதரங்கள்
செருக்குடன் சினந்து
பழிக்கும் அழகினை
பார்த்தால் பரவசமே!

                    அ. வேல்முருகன்


கருத்துகள் இல்லை:

திரளழகு

திரளழகை தீபவொளி திருத்தி எழுதிட முரணேது முந்தானை முகமன் கூறிட மரகதவுடல் மச்சானை மகிழ்ச்சியில் ஆழ்திட சரசங்கள் பயின்றிட சரணடை பேரழகே நின்னசைவ...