சிந்தித்துச் செயலாற்று
சிக்கலைச் சந்தித்தால்
சந்தித்த மனிதரில்
சான்றோனை நாடு
நாடும் யாவையும்
நன்மை கொடுக்கட்டும்
கொடுக்கும் தன்மையால்
கொஞ்சலும் மிஞ்சட்டும்
மிஞ்சும் வஞ்சியிடம்
மீளத் தஞ்சமோ
தஞ்சமெனில் தலையாட்டும்
தஞ்சாவூர் பொம்மையா
பொம்மையா மக்கள்
போக்கிரிகளை நம்பிட
நம்பிதான் ஏமாறுவர்
நாயகன் வருவானென
வருகின்றத் தலைவனோ
வரியால் வருத்திட
வருத்தத்தை மக்கள்
வாக்கால் மாற்றுவர்
மாற்றத்தை உருவாக்கும்
மக்களின் சீற்றம்
சீற்றம் அறிந்து
சிந்தித்துச் செயலாற்று
அ. வேல்முருகன்
சிக்கலைச் சந்தித்தால்
சந்தித்த மனிதரில்
சான்றோனை நாடு
நாடும் யாவையும்
நன்மை கொடுக்கட்டும்
கொடுக்கும் தன்மையால்
கொஞ்சலும் மிஞ்சட்டும்
மிஞ்சும் வஞ்சியிடம்
மீளத் தஞ்சமோ
தஞ்சமெனில் தலையாட்டும்
தஞ்சாவூர் பொம்மையா
பொம்மையா மக்கள்
போக்கிரிகளை நம்பிட
நம்பிதான் ஏமாறுவர்
நாயகன் வருவானென
வருகின்றத் தலைவனோ
வரியால் வருத்திட
வருத்தத்தை மக்கள்
வாக்கால் மாற்றுவர்
மாற்றத்தை உருவாக்கும்
மக்களின் சீற்றம்
சீற்றம் அறிந்து
சிந்தித்துச் செயலாற்று
அ. வேல்முருகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக