புதன், மே 21

நளினம்

 













கற்றைக் கூந்தலில் பூச்சூடி
கட்டுடலில் ஆடைச் சூடி
சிற்றிடை தன்னில் சிறையிட்டு
சிந்தனையைச் செயலிழக்கச் செய்தே
பற்றற்று வாழ்ந்த பாமரனை
பரிதவிக்க விட்ட பாவைநின்
கொற்றத்தில் ஆட்பட்ட என்னை
கொஞ்சிட தடைகள் ஏனடியோ


நளின அசைவுகளில் அதிர்ந்தது
நாடோ நிலமோ அல்ல
ஒளியின் அழகை ஒய்யாரி
ஒருத்தியால் பெற்ற நானே
களிறும் காளையுங் கடக்க
காதல் கொண்ட நானோ
துளிரு மன்பால் வேண்டுகிறேன்
துணையாய் வாடி வாழ்ந்திடவே

                                     அ. வேல்முருகன்


சனி, மே 10

அடையாளம்






ஆதி மனிதர்கள்
ஆதாம் ஏவாள் போல
அவர்கள் வாழ நினைத்தனர்

தேர்ந்தெடுக்க
தேவனுக்கும் தேவிக்கும்
வாய்பில்லாமலிருந்தது

ஆளுக்காருத் திசையில்
அவர்களின் பயணங்கள்
ஆயினும் சந்திப்பார்கள்

ஆக, அடையாளங்கள்
அநாகரிமென்று
அவர்களுக்குப் பட்டதால்

மோதிரமும் தாலியும்
மோதலின் போது
முன்னிருத்தும் ஆயுதமானதாலும்

மோகன இராகத்தில்
சட்ஜமும் பஞ்சமும் ரசித்தவர்கள்
அபசுரங்கள் கூடாதென்கிறார்கள்

கட்டுப்பாடுகளற்ற
காருண்யவாதிகள்
கலந்திருக்க நினைத்தனர்

கற்பனாவாதிகளுக்கு
காரியங்கள் சலிப்பூட்ட
கடையடைப்புச் செய்தனர்

சனாதானம் ஏற்படுத்தியச்
சடங்குகள்
சல்லி சல்லியா நொறுங்கியது

பொருளாதாரச் சுதந்திரம்
பொருட்சுவையைக் கூட்டாது
பொருட்சிதைவைக் உண்டாக்க

பொருந்தாமை உருவானது
பொருட்படுத்தாதோர் சிலர்
பொங்கியெழுந்தவர் சிலர்

அச்சமென்ன என
உச்ச நீதிமன்றம் சென்று
துச்சாதனன் அவனென்று

வழக்கான்றைத் தொடுத்து
வகை மோசத்திற்கு
வலி நிவாரணம் கேட்க

பொருள் ஆதாரமாக
இருளகற்றும் அறிவு
இல்வாழ்வை முறிக்குமோ

ஆட்சேபனையின்றி
அதிகரித்து வரும் போக்கை
ஆராய்சிதான் செய்ய முடியுமா

குறுக்கு விசாரணையில்
கிடுக்கிப்பிடிக் கேள்விகள்
சிறந்த தீர்ப்புக்கு வழிவகுக்குமா

தனக்கானப் பாதையை
தெளிந்த அறிவில்
வகுக்கத் தெரிந்தவர்கள்

எதற்கும் சம்மதமென
எடுக்கும் முடிவில்
ஏமாற்றப் பட்டால்

இரண்டாண்டுக்குள்
இடறுகிற போது
எடுக்கும் முடிவுகள்

பிரிவுதான் வழியென
அரிய வாழ்வுதனை
எரித்திடாது காத்திடவும்

திருமணம்தான் இலக்கெனில்
தீர்த்துச் சொல்லிக்
காத்திருங்கள்

அன்பு பிணைப்பில்
ஆண்டாண்டு காலம்
அன்றிலாய் வாழ்ந்திடலாம்

பலகாலம் வாழ்ந்தவர்
நிலவோடு உலவுவர்
ஓலமிடுவதில்லை

கண்ணே அமுதே என்றரற்றி
கனியுடன் பழமுண்டு
கசக்குதே என

பூவை நசுக்குவதும்
வண்டை மிதிப்பதும்
பொல்லாப்பில்தானே முடியும்

கற்பழிப்புக் கதையெழுதி
கட்டளை வேண்டுமென்றால்
கடைச்சாரக்கா நீதி

வியாழன், மே 8

பேரண்டத்தின் பேரழகி

 












கெண்டைக் கண்கள்
தண்டைக் கால்கள்
அண்டை அயலார்
அண்ட நினைக்கும்
பேரண்டத்தின் பேரழகி


சிவந்த அதரங்களால்
சிந்தியச் சொற்கள்
அட்சரச் சுத்தமாய்
ஆலாபனைச் செய்திட
ஆனந்தத் தாண்டவமாடினேன்

அலங்காரமா பிறையிலிட்ட
அத்திலகமும் நீரும்
அழகுதனைக் கூட்டவா
உலகம் மறந்து
உன்மத்தம் ஆக்கிடவா

எட்டு மடிப்பும் கலையாத
பட்டுச் ஜரிகைச் சேலையில்
கட்டுக் குலையாதவள்
கட்டுத்தறிக் காளைதனை
கட்டுப் படுத்திட

கால் கையசைத்து
கன்னக்குழி விழ
புன்னகையுடன் கதைக்கும்
கவித்துவ அழகை
கண்ணிமை மூடாது ரசித்திட

இளமையின் வளமையால்
களவுபோன எம்மனதை
கொள்ளைக் கொண்டவள்
உள்ளத்தில் உள்ளதாவென
ஊடுறுவிப் பார்த்திட

கலம்பகம் எழுதி
கலகங்கள் செய்து
காதலாய் பார்த்திட
செயற்கை நுண்ணறிவு
செதுக்கியச் சிற்பமாம்

 


ஞாயிறு, மே 4

கிழவி
















குமரனா நீ
கோபத்துடன்
கோமளவல்லி கேட்க

சுருக்கம் விழுந்ததாவென
சுறுசுறுவென
கண்ணாடியை தேடினவள்

பாட்டி வைத்தியத்தை
பலமுறைத் தேடி
பரிசீலித்துப் பார்க்க ஆரம்பித்தாள்

பப்பாளி, பாசிப்பயிறு
கசகசா என
எக்கச்சக்கமா சோதித்து

மாற்றம் தெரியுதா?
மறுவாரம் கேட்கிறாள்
என் கிழத்தி எனக்கு கிழவிதானே


                                         அ. வேல்முருகன்

முனீர் அகமது -மீனல்

 


மாநிலம் அறியா
மறைக்கப்பட்டத் திருமணம்
மாய வித்தைகளால்
கண்டங்கள் கடந்து அறியப்பட்டது

மாதராய் பிறப்பதற்கு
மாதவம் செய்திட வேண்டுமா
முனீரின் மீனல்
முத்தாய்ப்பாய் சொல்வாளா

பாரதியைக் கொண்டாடும்
பாரதப் புதல்வர்கள்
பாகிஸ்தான் பெண்ணை மணந்ததால்
பணிநீக்கம் செய்தனர்

பார்வைகள் பரிமாறி
பாரதத்தின் மருமகளாய்
பலதேசத்து மகளிர்
பாங்குடன் வாழ்ந்திட

பாகிஸ்தான் பகையானதால்
“பாரா மிலிட்டரி”க் காரன்
பாவம் செய்ததாய்
பஞ்சாயத்து முடிவு செய்தது

தாய்வழிச் சொந்தமென்றும்
தகுந்த ஆதாரத்தை
தக்கச் சமயத்தில் பகிர்ந்திருந்தும்
தண்டணை உறுதி செய்யப்படுகிறது

தேச அச்சுறுத்தலென
தேச பக்தர்கள்
தேசிய பத்திரிக்கைகள்
தேம்பி அழுதப்பின்

“பாரா மிலிட்டரி”க் காரனின்
பணிநீக்க உத்தரவு
பாரெல்லாம் அறிந்தபின்
பாதிக்கப்பட்டவனுக்கு அளித்தனர்

2017 -ல் பணியில் சேர்ந்து
2022 -ல் தகவல்கள் அளித்து
2024 -ல் அனுமதிப் பெற்றதாக
2025 -ல் போபாலில் கூறுகிறான்

வயிராற உண்ணவே
"பாரா மிலிட்டரி" பணி 
உயிர் போகுமென்றிந்து
ஒப்படைத்தவனின்  

தீராக் காதலை
தீவிரவாதிகளைப் போல்
தீர்த்து விடாதீர்கள்
தீர்ப்புகள் மாறட்டும்

தீவிரவாதம்
தேசத்தை மட்டுமா சீர்குலைத்தது
மேவிய காதலையும்
மூழ்கடிக்குதே

முனீர் – மீனலை
முடக்கி
மானுடத்தைக் கொல்லாதீர்
மனுநீதியென பிதற்றாதீர்


                                  அ. வேல்முருகன்

அறிந்தும் அறியாதது

  முற்பனிக் காலத்தில் முத்தழல் பற்றியெரிய முக்கனிச் சுவையை முக்காலமும் தேடிட இணையாய் வாழ இசைந்தோர் ஒப்பந்தம் இச்சையும் இடங்கொடுக்க இடைக்கட்ட...