ஞாயிறு, ஏப்ரல் 24

மிகப் பெரிய இழப்பு

உலகின் தலைச் சிறந்த தந்திரக்/மந்திர கலை நிபுணர் தனது 85 வயதில் காலமாகிவிட்டார்.  பலநாடுகளிலிருந்து மக்கள் வரவேண்டியிருப்பதால் அன்னாரின் ரசிகர்களின் வேண்டுகோளுகிணங்க வரும் புதன் அன்று அவரின் இறுதி சடங்கு நடக்கும் என ஆந்திர அரசு அறிவித்திருக்கிறது.

அன்னாரின் இழப்பை அறிந்து துயருற்ற குடியரசு தலைவர், துணைத் தலைவர், பிரதமர், மாநில ஆளுநர்கள், மாநில முதல்வர்கள், மத்திய மாநில அமைச்சர்கள் வெளிப்படையாக இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இரங்கலை வெளிப்படையாக சொல்ல முடியாத கறுப்பு பண முதலைகள், முதலாளிகள், இன்னும் சில மனிதர்களுக்கும், ஏமாளி பக்தர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசுக்கு கணக்கு வேண்டியதில்லை, இந்திய தண்டனைச் சட்டங்கள் செல்லுபடியாவதில்லை.  அப்படி ஓர் ஊர் இந்தியாவில் புட்டபர்த்தி, பிரசாந்தி நிலையம்.   40000 கோடிகளுக்கு மேல் சொத்துக்களை கையாளும் ஓரு நிறுவனம் அரசுக்கு கணக்கே காண்பிப்பதில்லை.   ஆனால் சம்பளம் வாங்கும் ஒவ்வொருவரும் ஆண்டின் இறுதியில் வருமான வரி செலுத்தியே ஆக வேண்டும்.  இது இந்தியா

இந்த இந்தியாவின் மிகப் பெரிய மோடி மஸ்தான் வித்தைக்காரன் சத்திய சாய் பாபா என்று அறியப்பட்ட நபர் இவ்வுலகை விட்டு சென்றார்..

40000 கோடி நிறுவனம் அவனை கடவுளாக்கி கோவில் கட்டி அந்த தீபத்தை அணையாது காக்க முயல்வர்.   மக்களே புரிந்து கொள்ளுங்கள் அது காக்க வேண்டிய தீபமா.

2 கருத்துகள்:

superlinks சொன்னது…

வணக்கம் தோழர்,
உங்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன் பாருங்கள்.

அ. வேல்முருகன் சொன்னது…

நன்றி தோழர்

மேல்பாதி திரௌபதி

ஆறுகால ஆராதனையின்றி அம்மன் அவதியுறுவதாய் ஆங்கொரு புலம்பல் அரவமில்லாது ஆலயத்தை திறந்து ஆராதனை முடிந்தவுடன் மூடிடவும் பக்த கோடிகள் பக்கம் வந்த...