புதன், அக்டோபர் 8

ஊடல்





வேல்விழியால் வேதனை
   வேண்டா என்பதா வேலவனை
வீண்பழியால் சோதனை
   விண்ணப்பமே மன்னிப்பாயா காவலனை
இல்வாழ்வில் ஊடலே
   ஏனிந்த தண்டனை ஏந்திழையே
ஏனென்று கேட்டாலே
   என்மனம் ஆறுமே மாறுமே

மெளனமா உனதுமொழி
    மடைதிறந்த மார்கழி சங்கீதமே
பௌதிக பார்வைதானே
   பாவையுனை பற்றிட வைத்தது
கெளதமனா ஆசைதுறந்து
   காசிராமே ஸ்வரம் சென்றிட
ரௌத்திரம் வேண்டாமடி
   ராசியாகி ராஜசுகம் தேடுவோமடி

தமிழ்நாட்டின் சூத்திரங்கள்

  கேலிக் கூத்துக்கள் காலிப் பெருங்காயமாச்சு புலிச் சிங்கமில்லை மலிவான மனிதனென்றே உச்ச நீதிமன்றம் எச்சரித்து விட்டப் பின்னும் எச்சமாக ஏனின்னு...