
வேணுகோபலனுக்கும்
இராகவேந்திரனுக்கும்
பன்றிக் கறிப் படைத்திட
பதைபதைத்தது கோவை
கண்ணப்பன் நாயனாரானார்
ஹரி என்கிற
ராம் பிரகாஷ் நாயனாராவதை
இந்துக்கள் தடுத்து விட்டனர்
வராக அவதாரமெடுத்து
பூமியைக் காப்பாற்ற
ஆயிரமாண்டுகள் போர் செய்து
அசுரனை வென்றவர்
ஐந்து மணி நேரத்தில்
மறைகாணியில்(CCTv)
படையிலிட்டவனைக் கண்டுபிடிக்க
மலைத்து நிற்கிறார்
பகவான் மலைக்கலாம்
பலரறியப் படையிலிட்டால்
பாரத் ரத்னா
பட்டம் அளித்திருக்கலாம்
யாருமறியாததால்
இஸ்லாமியர் கலங்கினர்
ஆட்டுக் கறிக்கே
அக்லக் அல்லாவிடம் சென்றதனால்
நன்றிகள்
நகர காவல் ஆணையருக்கு
சொன்னது இஸ்லாமியர்களா
நாம் மனிதர்கள்
3 கருத்துகள்:
சாட்டையடி...
ஆன்மீகம் அமைதிக்கல்லவா வழி வகுக்க வேண்டும்
அருமையான வரிகள்
தொடருங்கள்
கருத்துரையிடுக