திங்கள், ஜூன் 22

கற்றல்


 

வில்லின் நாணா
வனிதை யானா
வளை-வில் அழகு
வளைத்துப் பழகு

நாணைப் பூட்டி
நாணமற்று விளையாடு
நாழிகை யென்ன
நாள் முழுக்கத் தேடு

ஏழுலகம் காட்டவா
எனதெடைப் பார்க்கவா
ஏனிந்த கேள்வியடி - நீ
எந்தன் வெற்றியடி

இதழெனும் மதுவிருக்க
ஏனிந்தக் கோப்பையடி
தாகம் தீர்ந்தாலும்
தவிப்பாய் அதற்காகடா

மங்கையிடம் மற்போரா 
மன்மதக் கலைதானடா
தீரா மோகத்திலே
தடையேனடி வேகத்திற்கு

ஓய்யார அழகினிலே
ஓய்வறியா மனசு
ஓடம் கரைசேர
ஓர் உயிராய் ஆவோமே

பனிவிழும் மலர்வனம்

பனிவிழும் மலர்வனம் பரிதியெழ மனங்கவரும் இனியன நிகழும் இணையென நீயாக எனினும் ஏந்திழையே எங்குனைக்  காண்பேன் கனிவுடன் வந்தென் கரம்தனைப்  பற்றுவா...