திங்கள், ஜூன் 22

கற்றல்


 

வில்லின் நாணா
வனிதை யானா
வளை-வில் அழகு
வளைத்துப் பழகு

நாணைப் பூட்டி
நாணமற்று விளையாடு
நாழிகை யென்ன
நாள் முழுக்கத் தேடு

ஏழுலகம் காட்டவா
எனதெடைப் பார்க்கவா
ஏனிந்த கேள்வியடி - நீ
எந்தன் வெற்றியடி

இதழெனும் மதுவிருக்க
ஏனிந்தக் கோப்பையடி
தாகம் தீர்ந்தாலும்
தவிப்பாய் அதற்காகடா

மங்கையிடம் மற்போரா 
மன்மதக் கலைதானடா
தீரா மோகத்திலே
தடையேனடி வேகத்திற்கு

ஓய்யார அழகினிலே
ஓய்வறியா மனசு
ஓடம் கரைசேர
ஓர் உயிராய் ஆவோமே

நோய்

  நோக்கும் கண்களால் நோயைத் தந்தாய் நீக்கும் மருத்துவம் நீயேதான் என்றாய் தூக்கம் கெடுத்து துவளச் செய்தாய் தாக்கும் நினைவுகளால் தவிக்கவ...