சனி, டிசம்பர் 11

பெண்ணுக்கு பெண் எதிரி

பத்தாண்டுகளுக்கு முன் சேலம் அருகே மலர்கொடி என்ற பெண் நான்காவதாவும் பெண் குழந்தை பிறந்ததாலும் கணவனின் சுடு சொற்களாலும் நான்கே நாட்களில் உயிருடன் ஏதோ ஒரு பாலத்தின் அடியில் விட்டுவிட்டு சென்று விட்டார்.  மாடு மேய்க்கும் சிறுவர்கள் குழந்தையின் சத்தம் கேட்டு காப்பாற்றுகின்றனர்.

நேற்று பிறந்து நான்கு நாட்கள் ஆன பெண் குழந்தையை விஷம் கொடுத்து கொலை செய்து விட்டார் என்னும் செய்தி............

அவர்களின் வறுமையை நினைத்து வேதனை படுவதா அல்ல
சமுகத்தின் பெண்களை வளத்து ஆளாக்கி திருமணம் செய்து கொடுக்க படும் துன்பத்தை நினைத்து ............ இம்முடிவை எடுத்திருப்பார்கள் என நினைப்பதா

எப்படியாயினும் உயிரை கொல்வது ................

மலர்கொடியின் செயலுக்கு வருத்தப்பட்டு அப்போது எழுதிய சில வரிகள்

மாதவம் வேண்டும்
   மாதராய் பிறப்பதற்கு
பாடியவன் பாரதி
   பழங்கதையாய் போனானோ
பாதகமாய் ஆக்கியது
   பாலினமோ மலர்கொடி
சாதகமாய் ஆக்கிடுமோ
   சாவுதான் சொல்லடி

கொண்டவன் அடித்தானென்று
    கொன்று விடுவதோ
ஆண்டவன் கூறினானோ
   ஆ ண்பிள்ளை உனக்கென்று
கண்டவன் சோதிடம்
   காலத்தால் பொய்தானே
மாண்வடள் மீண்டது
    மேய்ப்பவர் செயல்தானே

கருத்தம்மா கண்டுமா
   கண்ணிழந்த பெண்ணானாய்
அருந்தவமா அவரவர்
   ஆண்டவனை வேண்டுகையில்
வெறுத்தாம்மா போனாய்
    வேண்டுதல் நிறைவேறாதது
நிறுத்தம்மா இச்செயலை
   நீயும் பெண்தானே

எண்ணும் மனமும்
   ஏற்றமிகு உறுதியும்
பெண்ணுக்கும் உண்டு
  பேதமை நீக்கம்மா
புண்ணுக்கு மருந்தாய்
   பெண்ணை வளர்த்தால்
விண்ணுக்கும் புகழ்பரப்பி
    வியக்க வைப்பாளம்மா

கருத்துகள் இல்லை:

தேர்தல் 2024

நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...