திங்கள், மார்ச் 21

முத்துப் பல்லழகி

முத்துப் பல்லழகி
         மோகனச் சொல்லழகி
சித்தம் கலங்குதடி
         சிரித்திடும் அழகிலடி
நித்தம் யோசனையடி
        நீயெனக்கு சொந்தமென
தத்தம் செய்வாயோ
       தடையென உரைப்பாயோ

ஆசை அடங்கலடி
       ஆதலினால் வேணுமடி
மீசை துடிக்குதடி
        மிச்சமும் எதிர்பார்க்கிறேனடி
ஆவண செய்வாயென
        ஆவலாய் காத்திருக்கிறேனடி
தவணைத் தரலாமென
         தள்ளி போடாதடி

கருத்துகள் இல்லை:

திரளழகு

திரளழகை தீபவொளி திருத்தி எழுதிட முரணேது முந்தானை முகமன் கூறிட மரகதவுடல் மச்சானை மகிழ்ச்சியில் ஆழ்திட சரசங்கள் பயின்றிட சரணடை பேரழகே நின்னசைவ...