புதன், மார்ச் 16

ஓட்டு போடாதே

இந்த சொல் 80 களின் மத்தியில் மக்கள் கலை இலக்கிய கழக தோழர்கள் மூலம் அறிமுகமாகியது.  ஓட்டு போடும் வயது வந்த பருவம்.  அவர்கள் கூறிய கருத்துக்கள் ஏற்புடையதாக எனக்கு பட்டது.  அதிலிருந்து இன்றுவரை எந்தவொரு தேர்தலிலும் என்னுடைய கைவிரலை கரையாக்கிக் கொண்டதில்லை.

எத்தனையோ நண்பர்கள் உரிமை என்றனர். மற்றவர் கடமை என்றனர். மகஇக மட்டும் தேர்ந்தெடுக்கும் உரிமையும் கடமையும் உனக்கு வரும் போது தவறு செய்யும் இவர்களை திருப்பி அனுப்பும் உரிமை உனக்கு இருக்கிறதா? என கேள்வி எழுப்பினர்.

வீட்டு அனுப்பும் உரிமை 356 பிரிவுக்கு உள்ளது.  முனுமுனுக்க கூட உனக்கு உரிமையில்லை. உரிமையில்லாததில் உனக்கென் வம்பு.

அரசியல் மக்களுக்கான சேவை என்பதிலிருந்து தொழில் என மாறி நீண்ட நாட்களாகி விட்டது எனவேதான் தேர்தல் ஆணையமும் ரூ.16 இலட்சம் மூதலீடு செய்யலாம் என பரிந்துரை செய்துள்ளது.  மூதலீடு மூழ்கிபோகலாம் அல்லது 300 மடங்காகவும் மாறலாம்

4 பேர் மூழ்க போகிறான். ஒருவன் 300 மடங்கு சாம்பாதிக்க போகிறான்.  நடுவில் நாம் எதற்கு எனவே அனைவரும்

ஓட்டு போட வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

1 கருத்து:

மதுரை சரவணன் சொன்னது…

ஓட்டுப்போட மறுக்கும் சட்டத்தைப் பயன்படுத்தவும்.சும்மா வீட்டில் இருந்து விட வேண்டாம்.

மும்மொழிக் கல்வி

மும்மொழிக் கல்வி மூத்தக்குடி தமிழனுக்காம் முட்டாள்கள் முகாரி பாடுகிறார்கள் ஏட்டுக் கல்வி இந்தி பேசுபவர்களுக்கு இரண்டா? ஒன்றா? கேட்பது யார்? ...