திங்கள், மார்ச் 21

எங்கு சென்றாய் என்னவளே...

மங்கும் மாலை யெல்லாம்
         மங்கை உனது நினைவுதான்
அங்கு மிங்கும் சுற்றிய
         அந்த பொழுது இனிமைதான்
எங்கு சென்றாய் என்னவளே
         எதிலும் உனைநான் தேடுகிறேன்

தங்கமே உன்னை காணாது
         தவிப்பவனை தணிக்க வாராயோ
திங்கள் கடந்தும் அன்பே
         திசைதான் மறந்து போனாயோ
அங்கம் மெலிய அவரவர்
         ஆரிவன் என்று கேட்கின்றனர்

சித்திரமே என்சொத்து பத்திரமே
         சீக்கிரம் வந்திடு அருகே
நித்திரையும் எனக்கு சித்திரவதையே
         நீயிங்கு இல்லை உயிரே
முத்திரையாய் நின்னிதழ் பதித்தால்
         மூச்சுக்கு உத்திர வாதமே

கருத்துகள் இல்லை:

தேர்தல் 2024

நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...