சனி, ஏப்ரல் 2

இந்துத்துவம்

இன்று ஒரு குறுந்தகவல் எனக்கு வந்தது. அது இன்றைய கிரிக்கெட்டை பற்றியது.
The current circket World cup situation between IND Vs SRL as this:  India (Ram) married World cup (Sita) in 1983 and in 1996 Srilanka (Raavan) took away Sita (World cup).  Now after 14 years of Vanvaas, they meet again and you know the result.

நிச்சயமாக இது சில ஆயிரம் பெயரையாவது சென்றடைந்திருக்கும்.  கைபேசியிலிருந்து வேறு யாருக்கும் அனுப்ப மனமில்லை எனினும் எனது கருத்து.

இது விளையாட்டு ஆனால் அது அணுகப்படும் விதம் இராமன் இராவணன், சீதா.  என இந்துத்துவா திணிக்கப்படுகிறது.

மதம் என்பது அபின் என்றார் மார்க்ஸ்.  அந்த போதையில்தான் 14 ஆண்டுகள் கழித்து இராவணனிடமிருந்து சீதையை திரும்ப பெற இந்திய இராமன்கள் பாடுபடுகிறார்கள்.

நாம் சொல்வோம் இத்தனை ஆண்டுகள் கழித்து திரும்ப அழைப்பது நன்றாக இருக்காது சீதை இராவணனோடே வாழட்டும் என்று

அது சரி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை கைமாறும் சீதையை நீங்கள் என்னவென்று சொல்வீர்கள்

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அடப்பாவமே சீதைக்கு இப்படி ஒரு அவப்பெயரா!!! இந்துவெறியர்களுக்கு புத்தி இல்லையா நான்கு வருடத்துக்கு ஒருதரம் கைமாறும் கிரிக்கெட் உலக கப்பும் சீதையும் ஒன்றா??? அப்படினா 12 வருஷம் ஆஸ்த்றேளியாவுலேயா சீதை இருந்தார்கள். பாவம் ராமன்.

மஹாராஜா

அ. வேல்முருகன் சொன்னது…

அய்யோ, இராமன் சீதையை 14 வருடம் கழித்து இராவணனிடமிருந்து கைப்பற்றிவிட்டான்

மேல்பாதி திரௌபதி

ஆறுகால ஆராதனையின்றி அம்மன் அவதியுறுவதாய் ஆங்கொரு புலம்பல் அரவமில்லாது ஆலயத்தை திறந்து ஆராதனை முடிந்தவுடன் மூடிடவும் பக்த கோடிகள் பக்கம் வந்த...