செவ்வாய், ஏப்ரல் 14

கைத்தட்டாதே





இரண்டு தெரு தள்ளியிருக்கும்
எனை ஈன்ற அன்னையை
பார்க்க சென்றேன்
பார்த்தாளோ என்னவோ
   
நில் அங்கேயென
உள் அனுமதியாது
பார்க்க வந்தவளை
பாதையிலே திருப்பினாள்

இருக்கும் நிலையில்
இனி வராதே என்றாள்
கைபேசியில் நலம் விசாரி
புறப்படு என அனுப்பிவிட்டாள்

மருத்துவர் மாண்டார்
மாண்டவர் யாராயினும்
மானுட நியதி  
நல்லடக்கம்

கார்ப்பரேட் மருத்துவமனை
கருணை கொண்டு
இடுகாட்டின் வாசலில்
வீசி சென்றது

உற்றார் உறவினர்
உடனில்லை ஒருவரும்
கற்ற படிப்பும்
கவைக்கு உதவவில்லை

அரிச்சந்திரன் கதை படித்து
அய்யகோ என மாரடித்து
அழ யாருமில்லை - இடுகாட்டு
ஊழியனும்  ஓடிவிட்டான்

நீத்தார் பெருமையோ
நிறைய சம்பாதித்த கதையோ
கொரோனோவிற்கு முன்
ஒன்றுமில்லை

சமூகம் சமத்துவமானது
மருத்துவனோ ஈன்றவளோ
மரணத்தின் எவ்விளிம்பிலும்
நீ தேவையற்றவன் 

தடுதாட்கொள் புராணம்

  தனித்தீவா நானிருந்தேன் தடுத்தாட் கொள்ளவந்தாய் இனியென்ன என்றபோது இதயமதை தந்தாய் பனிபடர்ந்த பொழுதிலும் பாற்கடல் அமுதளித்தாய் எனினும் ஏனின்று...