வெள்ளி, ஏப்ரல் 10

புலம் பெயர்தல்




தத்தி தவழ்ந்து
புத்தி தெளிந்த
என் நாட்டை விட்டு
ஏகாந்த தேசம். புறப்ப

சுயம்வர தேடலில்
சோதிடப் பொருத்தத்தில்
சிந்தை கவர்ந்தவனோடு
சென்னை செல்கிறேன்

கொட்டாரத்தில் ஆடியதும்
குளத்தில் நீந்தியதும்
எட்டாது என்றாலும்
எனக்கவன் கிட்டுவானென்றால்

சிட்டாக பறப்பேனே
மொட்டாகக மலர்வேனே
கட்டியம் கூறுவேனே
கண்ணாளன் இவனென்று

முட்டத்து மீனும்
கிட்டத்து தோழியும்
எட்டாது போவர்
என்னத்தான் என்கைபிடிக்க

வெள்ளிமலை முருகனும்
தெருக்கோயில் காவடியும்
விட்டுவிட்டு சென்றாலும்
வேலவன் என்னுடனே

திண்ணியன் என்அத்தான்
திருமுகம் போதுமே
திகட்டாத அன்பை
தினம்தினம் தருவானே

ஏழுகாத தூரமென்றாலும்
எனக்கது கூப்பிடு தூரம்தான்
என்னுறவும் தோழியரும்
எனை புரிந்தவர்தாம்

எண்ணியவுடன் எழுந்தருள
என்னத்தான் கண்ணசைப்பார்
எந்தையும் என்று வருவேனென
எதிர் பார்த்து காத்திருப்பார்

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை

சிவகுமாரன் சொன்னது…

புது மணப் பெண்ணின் ஆர்வமும், ஏக்கமும் ஒரு சேர பிரதிபலிக்கும் கவிதா. மிக நன்று.

தேர்தல் 2024

நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...