ஞாயிறு, ஏப்ரல் 26

ஜோதிகா



ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்
அடிமைகளால்
அமைத்த கோயில் - இன்றும்
அழகாயிருக்கிறது

அருகிருக்கும் மருத்துவமனையோ
அலங்கோலமாய்! அருவருப்பாய்!!
அது எப்படியோ
ஆனால் நன்றாயில்லை

நடிகையென்பதாலோ
நாக்கிருக்கிறது என்பதாலோ
நாலுபேரிடம் கூக்குரலிடவில்லை
மனதிருப்பதால்

கடைநிலையை கண்டு
கண்கலங்குவது
கனவுலகில்  அல்ல
கண்ட இடத்தில்

ஆட்சியர் வருகையும்
அவலம் நீங்குதலும்
அவர் பொருட்டெனில்
அதை வரவேற்போம்

கோயிலுக்கோ
உண்டியலுக்கோ
கொடுக்க வேண்டாமென்ற
குரலல்ல

மருத்துவத்திற்கும்
கல்விக்கும்
கொடுவென்றே
கோடிட்ட குரல்

குரலிட்டவன் கொடுப்பதுதானே
5 கோடி முதலிட்டு
9 கோடிக்கு விற்றதில்
கொடுப்பார்கள் என கேலிகள்

சமூக தளங்களில்
இரண்டு மூன்று பிரிவுகளாய்
விமர்சனங்கள் - அவர்
பேசியதை கேட்காமலே

ஆம், அவை
அப்படிதான் இயங்குகிறது
ஆயினும் அதை மாற்றிட
என்ன செய்யலாம்?

இவரை  போல் - அங்கிருந்து
இன்னும் சிலர் - அரங்கத்தில்
கூக்குரலிட்டால் - ஏதும்
விமோசனம் கிட்டுமோ?!

2 கருத்துகள்:

Kasthuri Rengan சொன்னது…

பொறுப்பான கவிதை

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிலரை புரிய வைப்பது கடினம்...

தேடல்

  இருவருக்குள் இன்னும் ஏதோதோ தேடல் எனவே இணைந்தே இருக்கிறோம் அன்பிருக்கிறது ஆயினும் கொடுபடாதது கொஞ்சமிருப்பதால் கொஞ்சல்கள் தொடர்கின்றன அதுபோ...