வெள்ளி, மே 20

வேலூர்

எத்தனையோ சிறப்புகள் உண்டு வேலூர் மாவட்டத்திற்கு.

நேற்று எனக்கு வேறுபட்ட அனுபவம்.  உறவுகாரர்களை பார்க்க பயணம். இனிப்பைக் காட்டிலும் பழங்கள் உடலுக்கு நல்லது என்பதால் பழைய பேருந்து நிலையம் அருகிலிருக்கும் பழ கடைக்குச் சென்றேன்.  ஆப்பிள் 1 கிலோ விலை ரூ.140 பேரத்தில் ரூ.10 தள்ளுபடி எடையை பார்த்தால் 750 கிராம்.  சரியென்று வேறு கடைக்கு சென்றேன். திராட்சை 1/4 கிலோ ரூ.30,      சரி 1/2  கிலோ கொடு என்றேன்.  600 கிராம் படிக் கல்லை வைத்து எடை போட்டால் 1/4 கிலோவிற்கும் குறைவான எடை.  பார்த்தேன் வேலூரில் பழம் வாங்கும் ஆசையே போய்விட்டது.

இது என்ன வாழ்க்கை. கண் முன்னே ஏமாற்றுவது.   அதற்கு கூறு கட்டி வியபாரிடமே வாங்கலாம்.  எவ்வளவுக்கு எவ்வளவு என்று தெரிந்தே வாங்குகிறோம்.  கேட்டது ஒன்று கிடைப்பது ஒன்று என்றால்......... அதுவும் ஏமாற்றபடுகிறோம் என்றால்...........

1 கருத்து:

மதுரை சரவணன் சொன்னது…

எல்லா ஊரிலும் இதே மாதிரி தான் தெரிந்தே ஏமாற்றுகிறார்கள்.. ஏமாறவும் செய்கிறோம்..

டி.எம். கிருஷ்ணா

  கர்நாடக சங்கீதம் கருவறை பொக்கிஷமா காப்பாற்ற வேண்டுமென கதறுதே ஓரு கூட்டம் ரஞ்சினியும் சுதாக்களும் ராக ஆலாபனையில் ரசாபாசம் உள்ளதென்றா ரசிகைய...